|
மருமலி
மென்மலர்ச் சந்து
வந்திழி காவிரி மாடே
பருமணி நீர்த்துறை யாரும்
பாண்டிக் கொடுமுடி யாரே.
9 |
2220.
|
புத்தரும்
புந்தியி லாத
சமணரும் பொய்ம்மொழி யல்லான்
மெய்த்தவம் பேசிட மாட்டார்
வேடம் பலபல வற்றால்
சித்தருந் தேவருங் கூடிச்
செழுமலர் நல்லன கொண்டு
பத்தர்கள் தாம்பணிந் தேத்தும்
பாண்டிக் கொடுமுடி யாரே. 10 |
நின்ற பெருமானார்,
மணம் கமழும் மென்மலர்கள், சந்தனம்
ஆகியவற்றுடன் வரும் காவிரித்துறையில் விளங்கும் பாண்டிக்கொடுமுடி
இறைவராவார்.
கு-ரை: திருமகள் காதலினான் - இலக்குமி
காதலரான திருமால்.
திகழ்தரு - விளங்குகின்ற. மாமலர் - தாமரைப்பூ. மேலை -
மேலிருத்தலையுடைய. பெருமகன் - பிதாமகன் (பிரமன்). அழல் - தீ.
மரு - மணம். மலி - மிக்க. சந்து - சந்தனமரம். மாடு - பக்கம். பரு -
பருத்த. மணித்துறை - நீர்த்துறை. துறைமணி உம் என்றும் துறை ஆரும்
என்றும் கொள்ளலாம். பெம்மான் கொடுமுடியாரே என்க. துறைஆரும்
பாண்டிக்கொடுமுடி.
10. பொ-ரை:
புத்தர் சமணர் ஆகியோர் பொய்மொழியல்லால்
உண்மைத்தவநெறிகளைப் பேசிடமாட்டார். அவருடைய பலப்பல
திருவடிவங்களைச் சித்தர் தேவர் முதலியோருடன் பத்தர்கள் நல்ல
செழுமையான மலர் கொண்டு பணிந்தேத்த விளங்குபவர்
பாண்டிக்கொடுமுடி இறைவர்.
கு-ரை: புந்தி - அறிவு. மாட்டார் -
வன்மையில்லாதவர்.
வேடம்பலபல வற்றால் - சிவமூர்த்தம், மகேசுரமூர்த்தம் எனப்
பற்பலவற்றால். சித்தர் - சித்துக்களில் வல்லவர். செழுமையுடைய
நல்ல மலர்களைக் கொண்டு பத்தர் (அன்பர்), சித்தர், தேவர்
எல்லோரும் ஏத்தும் தலம்.
|