பக்கம் எண் :

782

2229.







புறவஞ் சிரபுரமுந் தோணிபுரஞ் சண்பைமிகு
     புகலி காழி
நறவ மிகுசோலைக் கொச்சை வயந்தராய்
     நான்முகன் றனூர்
விறலாய வெங்குருவும் வேணுபுரம் விசயன்
     மேலம் பெய்து
திறலா லரக்கனைச் செற்றான்றன் கழுமலநாஞ்
     சேரு மூரே.                        8

2230.


சண்பை பிரமபுரந் தண்புகலி வெங்குருநற்
     காழி சாயாப்
பண்பார் சிரபுரமுங் கொச்சை வயந்தராய்
     புறவம் பார்மேல்


பிரியாதவனாய், திருமாலும் பிரமனும் வழிபட்டும் காண் பரிய பெருமானாய்
உள்ள சிவபிரானது ஊர் கழுமலம்.

     கு-ரை: சீர் ஆர் - புகழ் நிறைந்த. கனம் மிக்க எனலுமாம். நல்ல
ஆராத்தராய் - நல்ல தெவிட்டாத பூந்தராய். ஏர் - அழகு. என்று என்று:-
அடுக்கு இடைவிடாமை மேலது. உள்கி - நினைத்து. பேரான் -
பெயராதவனாய். பேரான் என்பது இருவர்க்கும் பொதுவாய்த் தனித்தனி
அமையும். பேரானாய்க் காண்பு என்க.

     8. பொ-ரை: நாம் சேர்வதற்குரிய ஊர் புறவம் முதலாக வேணுபுரம்
உள்ளிட்ட பன்னிரு திருப்பெயர்களைக் கொண்டது. அது அருச்சுனனோடு
விற்போர் செய்தவனும் இராவணனை அடர்த்தவனும் ஆகிய சிவபிரானது
கழுமலமாகும்.

     கு-ரை: நறவம் - தேன். நான்முகன்றன் ஊர் - பிரமபுரம். விறல் -
பெருமை. விசயன் - அருச்சுனன். திறல் - திறன். அரக்கன் - இராவணன்.
செற்றான் - அழித்தான்.

     9. பொ-ரை: நாணமற்ற வெண்பற்களைக்கொண்ட சமணர்கள்,
சாக்கியர்கள் ஆகியோரின் பெருமைகளை அழித்த விமலனது ஊர், சண்பை
முதலாகத் தோணிபுரம் ஈறாகப் பன்னிரு பெயர்களைக் கொண்ட ஊராகும்.