பக்கம் எண் :

783

நண்பார் கழுமலஞ்சீர் வேணுபுரந் தோணிபுர
     நாணி லாத
வெண்பற் சமணரொடு சாக்கியரை வியப்பழித்த
     விமல னூரே.                             9
2231.







செழுமலிய பூங்காழி புறவஞ் சிரபுரஞ்சீர்ப்
     புகலி செய்ய
கொழுமலரா னன்னகரந் தோணிபுரங் கொச்சைவயஞ்
     சண்பை யாய
விழுமியசீர் வெங்குருவொ டோங்குதராய் வேணுபுர
     மிகுநன் மாடக்
கழுமலமென் றின்னபெயர்பன்னிரண்டுங் கண்ணுதலான்
     கருது மூரே.                             10
2232.



கொச்சை வயம்பிரம னூர்புகலி வெங்குருப்
     புறவங் காழி
நிச்சல் விழவோவா நீடார் சிரபுரநீள்
     சண்பை மூதூர்

     கு-ரை: சாலாப் பண்பு - அழியாக்குணம். பண்பார் - குணத்தார்
எனினுமாம். நாண் - நாணம். வியப்பு - பெருமை. விமலன் - அநாதி
மலமுத்தன்.

     10. பொ-ரை: செழுமையான அழகிய காழி முதலாக வேணுபுரம்
ஈறாகப் பன்னிருபெயர்களைக் கொண்டது கண்ணுதலான் கருதும் ஊராகும்.

     கு-ரை: செழுமலிய - செழிப்பு மலிதலையுடைய. செய்ய
கொழுமலரான் நன்னகரம் - பிரமபுரம். விழுமிய சீர் - மிக்க புகழ்.
பன்னிரண்டும் ஊர் என்றது ஈண்டும் காண்க.

     11. பொ-ரை: நாம் விரும்பும் ஊர், கொச்சைவயம் முதலாகத்
தோணிபுரம் உள்ளிட்ட பன்னிரு பெயர்களைக்கொண்டதும் நம்மேல் வரும்
அச்சங்கள் தீர்த்தருளும் அம்மான் எழுந்தருளியிருப்பதுமான கழுமலமாகும்.