|
நச்சினிய
பூந்தராய் வேணுபுரந் தோணிபுர
மாகி நம்மேல்
அச்சங்கள் தீர்த்தருளு மம்மான் கழுமலநாம்
அமரு மூரே. 11 |
2233.
|
காவி
மலர்புரையுங் கண்ணார் கழுமலத்தின்
பெயரை நாளும்
பாவியசீர்ப் பன்னிரண்டு நன்னூலாப் பத்திமையாற்
பனுவன் மாலை
நாவி னலம்புகழ்சீர் நான்மறையான் ஞானசம்
பந்தன் சொன்ன
மேவியிசை மொழிவார் விண்ணவரி லெண்ணுதலை
விருப்பு ளாரே. 12
|
திருச்சிற்றம்பலம்
கு-ரை:
நிச்சல் - நாடோறும். விழவு - திருவிழாக்கள். ஓவா -
ஒழியாத. நீடு ஆர் - காலத்தாலும் இடத்தாலும் நெடுமை பொருந்திய.
நச்ச இனிய - விரும்புதற்கு இனிய. அச்சங்கள் - பிறப்பச்சம் முதலியவை.
அம்மான் - அருமகன் என்பதன் மரூஉ. பெருமகன் என்பது பெம்மான்
என்று வருதல்போல.
12. பொ-ரை:
குவளை மலர் போலும் கண்களை உடைய
மகளிர் வாழும் கழுமலத்தின் பெயர்களை நாள்தோறும் புகழ்மிக்க
பன்னிரு நூல்கள் போல நாவினால் நலம் புகழ்ந்து ஞானசம்பந்தன்
பாடிய இப்பனுவல்மாலையை இசையோடு மொழிபவர் விண்ணவர்களில்
ஒருவராக எண்ணப்பெறும் மேலான விருப்புடையவர் ஆவர்.
கு-ரை:
காவி - நீலோற்பலம், கருங்காவி. புரையும் - ஒக்கும்.
பாவிய - பரவிய. பத்திமை - அன்பு. மை விகுதி தமிழ் பத்திமையாற்
பணிந்து. (தி.6 பதி.54 பா.3) தலைவிருப்பு - தலையன்பு.
|