|
வேய்ந்தமதிற்
கழுமலம்விண் ணோர்பணிய
மிக்கயனூர்
அமரர்கோனூர்
ஆய்ந்தகலை யார்புகலி வெங்குருவ
தரனாளும்
அமருமூரே. 3 |
2259.
|
மாமலையாள்
கணவன்மகிழ் வெங்குருமாப்
புகலிதராய்
தோணிபுரம்வான்
சேமமதில் புடைதிகழுங் கழுமலமே
கொச்சைதேவேந்
திரனூர்சீர்ப்
பூமகனூர் பொலிவுடைய புறவம்விறற்
சிலம்பனூர்
காழிசண்பை
பாமருவு கலையெட்டெட் டுணர்ந்தவற்றின்
பயன்நுகர்வோர்
பரவுமூரே. 4 |
2260.
|
தரைத்தேவர்
பணிசண்பை தமிழ்க்காழி
வயங்கொச்சை
தயங்குபூமேல்
விரைச்சேருங் கழுமலமெய் யுணர்ந்தயனூர்
விண்ணவர்தங்
கோனூர்வென்றித் |
கு-ரை:
மறை - வேதம். சிலம்பன் வாழ்ஊர் - சிரபுரம். நாகநாத
சுவாமிகோயில்.
4, பொ-ரை:
பாக்களில் பொருந்திய அறுபத்து நான்கு
கலைகளையும் உணர்ந்து அவற்றின் பயனை நுகரும் அறிஞர்கள் போற்றும்
ஊர், மலையான் மகளாகிய பார்வதி தேவியாரின் கணவராகிய பெருமானார்
விரும்பும் வெங்குரு முதலான பன்னிரு பெயர்களைப் பெற்ற சீகாழிப்
பதியாகும்.
கு-ரை:
மாமலையாள் - இமாசல குமாரியான உமாதேவியார். சேமம்
- காவல். பூமகனூர் - பிரமபுரம். பொலிவு - விளக்கம். விறல் -வலிமை,
வெற்றி. கலை எட்டெட்டு - அறுபத்து நான்கு கலைகள். நுகர்வோர் -
அநுபவிக்கும் அறிஞர்கள்.
5.
பொ-ரை: உலகின்கண் உயர்ந்தஊர், தரைத்தேவராகிய
அந்தணர்
பணியும் சண்பை முதலான பன்னிருபெயர்களைப் பெற்ற சீகாழிப்பதியாகும்.
|