|
திரைச்சேரும்
புனற்புகலி வெங்குருச்
செல்வம்பெருகு தோணிபுரஞ்சீர்
உரைச்சேர்பூந் தராய்சிலம்ப னூர்புறவ
முலகத்தி லுயர்ந்தவூரே. 5 |
2261.
|
புண்டரிகத்
தார்வயல்சூழ் புறவமிகு
சிரபுரம்பூங் காழிசண்பை
எண்டிசையோ ரிறைஞ்சியவெங் குருப்புகலி
பூந்தராய் தோணிபுரஞ்சீர்
வண்டமரும் பொழின்மல்கு கழுமலநற்
கொச்சைவா னவர்தங்கோனூர்
அண்டயனூ ரிவையென்ப ரருங்கூற்றை
யுதைத்துகந்த வப்பனூரே. 6 |
2262.
|
வண்மைவளர்
வரத்தயனூர் வானவர்தங்
கோனூர்வண் புகலியிஞ்சி
வெண்மதிசேர் வெங்குருமிக் கோரிறைஞ்சு
சண்பைவியன் காழிகொச்சை |
கு-ரை:
தரைத்தேவர் - பூசுரர், அந்தணர். தமிழ்க்காழி என்றதால்
ஸ்ரீகாளிபுரம் என்றதன் திரிபென்ற கூற்று ஆராயத் தக்கது. விரை -மணம்.
மெய் உணர்ந்த அயன் என்க. அயனூர் - பிரமபுரம். விண்ணவர்தம்
கோன்ஊர் - வேணுபுரம். திலை - அரை. உரை - (புகழ்) மொழி.
6. பொ-ரை:
வெல்லுதற்கு அரிய கூற்றுவனை உதைத்து உகந்த
சிவபெருமானது ஊர், தாமரை மலர்களால் நிறைந்த வயல்கள் சூழ்ந்த புறவம்
முதலான பன்னிரு திருப்பெயர்கள் பெற்ற சீகாழிப் பதியாகும்.
கு-ரை:
புண்டரிகத்து ஆர்வயல்-தாமரை மலர்களால் நிறைந்த கழனி.
இறைஞ்சிய - வணங்கிய. வானவர் கோனூர் - வேணுபுரம். அண்ட அயனூர்
- பிரமதேவனூர். பிரமபுரம். காலசங்காரகர்த்தா என்க.
7. பொ-ரை:
வெண்ணீறு பூசிப் பால் போன்ற நிறமுடையோனாகிய
சிவபெருமான் எழுந்தருளிய ஊர், கொடைத்தன்மை
|