|
கண்மகிழுங்
கழுமலங்கற் றோர்புகழுந்
தோணிபுரம்
பூந்தராய்சீர்ப்
பண்மலியுஞ் சிரபுரம்பார் புகழ்புறவம்
பால்வண்ணன்
பயிலுமூரே. 7 |
2263.
|
மோடிபுறங்
காக்குமூர் புறவஞ்சீர்ச்
சிலம்பனூர்
காழிமூதூர்
நீடியலுஞ் சண்பைகழு மலங்கொச்சை
வேணுபுரங்
கமலநீடு
கூடியவ னூர்வளர்வெங் குருப்புகலி
தராய்தோணி
புரங்கூடப்போர்
தேடியுழ லவுணர்பயி றிரிபுரங்கள்
செற்றமலைச்
சிலையனூரே. 8 |
நிரம்பியோர் வாழும்
மேன்மையான பிரமபுரம் முதலான பன்னிரு
திருப்பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும்.
கு-ரை:
வண்மை - கொடை. வரத்து - மேன்மையையுடைய. இஞ்சி -
மதில். மிக்கோர் - ஞானம், தவம், தொண்டு, பூஜை முதலியவற்றால்
மேம்பட்டவர்.
கற்றோர்
- சிவபிரானை வழிபடும் நெறியை உணர்ந்தோர்.
வேதாகமங்களைக் கற்றவர் எனலுமாம். பார் - உலகம்.
8.
பொ-ரை: போர் உடற்றத்தேடித் திரிந்த அவுணர்வாழும்
திரிபுரங்களைச் செற்ற சிவபிரானது ஊர், துர்க்கையால் காவல் செய்யப்
பெறும் புறவம் முதலான பன்னிரு பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும்.
கு-ரை:
மோடி - துர்க்கை. புறங்காக்கும் - காவல் செய்யும். மோடி
புறங்காக்கும் ஊராகிய புறவம் என்க. (தி.2 ப.210 பா.8)
சீர்ச்சிலம்பன்
ஊர் - சிரபுரம். கமல நீடுகூடியவன் ஊர் - பிரமபுரம்.
(தாமரையில் வாழ்பவன்). போர். புரங்கள் செற்றமலை சிலையன் - திரிபுரத்
தசுரரை அழித்த மேருவில்லியாகிய சிவபிரான்.
|