பக்கம் எண் :

807

2266.







ஆக்கமர்சீ ரூர்சண்பை காழியமர்
     கொச்சைகழு மலமன்பானூர்
ஓக்கமுடைத் தோணிபுரம் பூந்தராய்
     சிரபுரமொண் புறவநண்பார்
பூக்கமலத் தோன்மகிழூர் புரந்தரனூர்
     புகலிவெங் குருவுமென்பர்
சாக்கியரோ டமண்கையர் தாமறியா
     வகைநின்றான் றங்குமூரே.       11
2267.



அக்கரஞ்சேர் தருமனூர் புகலிதராய்
     தோணிபுர மணிநீர்ப்பொய்கை
புக்கரஞ்சேர் புறவஞ்சீர்ச் சிலம்பனூர்
     புகழ்க்காழி சண்பைதொல்லூர்


     11. பொ-ரை: சாக்கியர் சமணர்களால் அறியப் பெறாதவனாகிய
சிவபிரான் தங்கும் ஊர், ஆக்கம் மிக்க ஊராகிய சண்பை முதலான
பன்னிரு பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும்.

     கு-ரை: ஆக்கு - ஆக்கம். ‘ஆக்கம்மிக்க ஊர்’ (தி.2 பா.210. பா.8).
(மன்று மன்றம் இன்பு இன்பம். நீட்டு நீட்டம். பாட்டு பாட்டம்
என்பவைபோல் அம்முப்பெற்றது). ஆக்கம் அமர் சீர் ஊர் என்க. அன்பான்
ஊர் - அன்புருவான சிவபிரான் ஊர். அன்பானூராகிய தோணிபுரம்.
‘அன்பே சிவம்’ கமலத்தோன் - பிரமதேவன். புரந்தரன் -இந்திரன். ஓக்கம்
- உயர்ச்சி. ஓங்குவது ஓக்கம்., நீங்குவது நீக்கம். தேங்குவது தேக்கம்.
அடங்குவது அடக்கம். தொடங்குவது தொடக்கம். பழக்கம், பழகு.
ஙகரவொற்றில்லை. இறக்கம் - இறங்கு ஙகர வொற்றிருக்கின்றது. பகுதியில்
அவ்வொற்றிருப்பினும் இன்றாயினும் வல்லொற்றுடைமை காண்க.

     12. பொ-ரை: புகழ்மிக்க தமிழ் விரகனாகிய ஞானசம்பந்தன்
திருவருளில் திளைத்துச் சக்கரமாகச் சொன்ன இத்தமிழ் மாலையைப்
போற்றி நாவில் தரிப்போர் தவஞ்செய்தோர் ஆவர்.

     கு-ரை: அக்கரம் (அக்ஷரம்) - அழிவின்மை. க்ஷரம் - அழிவு.
அழியாத தருமனூர் என்றது வெங்குருவினை. தருமன் - இயமதருமன்