பதிக
வரலாறு:
முன் பதிக வரலாற்றைக்
காண்க.
திருக்கோமூத்திரி
அந்தாதி
பண்:
காந்தாரம்
ப.தொ.எண்: 210
பதிக எண்.: 74
திருச்சிற்றம்பலம்
2268.
|
பூமகனூர்
புத்தேளுக் கிறைவனூர்
குறைவிலாப் புகலிபூமேன்
மாமகளூர் வெங்குருநற் றோணிபுரம்
பூந்தராய் வாய்ந்தவிஞ்சிச்
சேமமிகு சிரபுரஞ்சீர்ப் புறவநிறை
புகழ்ச்சண்பை காழிகொச்சை
காமனைமுன் காய்ந்தநுதற் கண்ணவனூர்
கழுமலநாங் கருதுமூரே. 1 |
2269.
|
கருத்துடைய
மறையவர்சேர் கழுமலமெய்த்
தோணிபுரங் கனகமாட
உருத்திகழ்வெங் குருப்புகலி யோங்குதரா
யுலகாருங் கொச்சைகாழி |
(இத்
திருப்பதிகம் கோமூத்திரியாய் அந்தாதி அமைப்பில் விளங்குவது)
1. பொ-ரை:
நாம் கருதும் ஊர் பிரமபுரம் முதலான பன்னிரு
பெயர்களையுடைய கழுமலமாகும்.
கு-ரை:
பூமேல் மாமகளூர் வெங்குரு - திருமகள் பரவும் ஊராகிய
வெங்குரு, அவள் வாழும் ஊர் எனலுமாம், செல்வம் பற்றியது. இஞ்சி -
மதில். சேமம் - காவல். காமனை - மன்மதனை. நுதல் - நெற்றி.
2. பொ-ரை:
சடைமுடியை உடைய அண்ணலாகிய சிவபிரான் தங்கும்
ஊர் நல்ல, எண்ணமுடைய மறையவர் வாழும் கழுமலம்
|