பக்கம் எண் :

810

திருத்திகழுஞ் சிரபுரந்தே வேந்திரனூர்
     செங்கமலத் தயனூர்தெய்வத்
தருத்திகழும் பொழிற்புறவஞ் சண்பைசடை
     முடியண்ணல் தங்குமூரே.          2
2270.
ஊர்மதியைக் கதுவவுயர் மதிற்சண்பை
     யொளிமருவு காழிகொச்சை
கார்மலியும் பொழில்புடைசூழ் கழுமலமெய்த்
     தோணிபுரங் கற்றோரேத்துஞ்
சீர்மருவு பூந்தராய் சிரபுரமெய்ப்
     புறவமய னூர்பூங்கற்பத்
தார்மருவு மிந்திரனூர் புகலிவெங்
     குருக்கங்கை தரித்தோனூரே.       3
2271.



தரித்தமறை யாளர்மிகு வெங்குருச்சீர்த்
     தோணிபுரந் தரியாரிஞ்சி
எரித்தவன்சேர் கழுமலமே கொச்சைபூந்
     தராய்புகலி யிமையோர்கோனூர்


முதலான பன்னிரு பெயர்களை உடைய காழிப்பதியாகும்.

     கு-ரை: கனகம் - பொன். திரு - இலக்குமி, அழகு. தரு - மரம்,
கற்பகம் முதலியவை.

     3. பொ-ரை: கங்கையைச் சடையில் தரித்த சிவபிரானது ஊர்
விண்ணில் ஊர்ந்து செல்லும் மதியைத் தொடுமாறு உயர்ந்த மதில்களை
உடைய சண்பை முதலிய பன்னிருபெயர்களைக் கொண்ட சீகாழிப்
பதியாகும்.

     கு-ரை: ஊர்மதி - விண் ஊர்ந்து செல்லும் சந்திரன். கதுவ - பற்ற.
கற்பத்தார் - கற்பகப்பூமாலை. தரித்தோன் - தாங்கியவன்.

     4. பொ-ரை: உலகில் விளங்கும் ஊர், வேதங்களை நாவில் தரித்த
அந்தணர்கள் மிகுந்த வெங்குரு முதலிய பன்னிரு பெயர்களைக் கொண்ட சீகாழிப்பதியாகும்.