பக்கம் எண் :

811

தெரித்தபுகழ்ச் சிரபுரஞ்சீர் திகழ்காழி
     சண்பைசெழு மறைகளெல்லாம்
விரித்தபுகழ்ப் புறவம்விரைக் கமலத்தோ
     னூருலகில் விளங்குமூரே.          4
2272.







விளங்கயனூர் பூந்தராய் மிகுசண்பை
     வேணுபுர மேகமேய்க்கும்
இளங்கமுகம் பொழிற்றோணி புரங்காழி
     யெழிற்புகலி புறவமேரார்
வளங்கவரும் வயற்கொச்சை வெங்குருமாச்
     சிரபுரம்வன் னஞ்சமுண்டு
களங்கமலி களத்தவன்சீர்க் கழுமலங்கா
     மன்னுடலங் காய்ந்தோனூரே.       5
2273.



காய்ந்துவரு காலனையன் றுதைத்தவனூர்
     கழுமலமாத் தோணிபுரஞ்சீர்
ஏய்ந்தவெங் குருப்புகலி யிந்திரனூ
     ரிருங்கமலத் தயனூரின்பம்


     கு-ரை: தரியார் - பகைவர். இஞ்சி - மும்மதில், திரிபுரம்.
இமையோர்கோன் - இந்திரன். விரை - மணம்.

     5. பொ-ரை: காமன் உடலைக் காய்ந்த சிவபிரானது ஊர், விளங்கும்
பிரமபுரம் முதலிய பன்னிரு பெயர்களைக் கொண்ட சீகாழிப் பதியாகும்.

     கு-ரை: மேகம் ஏய்க்கும்-மேகமண்டலத்தை ஒன்ற ஓங்கும்.
கமுகம் - பாக்குமரம். எழில் - அழகு. ஏர் ஆர் வளம் - அழகு
நிறைந்த வளமை. வல்நஞ்சம் - வலியவிடம். களங்கம் - குற்றம்.
களத்தவன் -(திருநீல) கண்டன். காமன் - மன்மதன். காய்ந்தோன் -
காய விழித்தவன். கோபித்தவன்.

     6. பொ-ரை: முருகப்பெருமானைப் பெற்றெடுத்து உலகில்
தேவர்களின் பகைவனாகிய சூரபன்மனை அழித்தருளியவனும்
சினந்துவந்த காலனை அன்று உதைத்தவனும் ஆகிய சிவபிரானது 130.