பக்கம் எண் :

812

வாய்ந்தபுற வந்திகழுஞ் சிரபுரம்பூந்
     தராய்கொச்சை காழிசண்பை
சேந்தனைமுன் பயந்துலகிற் றேவர்கடம்
     பகைகெடுத்தோன் றிகழுமூரே.      6
2274.







திகழ்மாட மலிசண்பை பூந்தராய்
     பிரமனூர் காழிதேசார்
மிகுதோணி புரந்திகழும் வேணுபுரம்
     வயங்கொச்சை புறவம்விண்ணோர்
புகழ்புகலி கழுமலஞ்சீர்ச் சிரபுரம்வெங்
     குருவெம்போர் மகிடற்செற்று
நிகழ்நீலி நின்மலன்றன் னடியிணைகள்
     பணிந்துலகி னின்றவூரே.           7
2275.



நின்றமதில் சூழ்தருவெங் குருத்தோணி
     புரநிகழும் வேணுமன்றில்
ஒன்றுகழு மலங்கொச்சை யுயர்காழி
     சண்பைவளர் புறவமோடி


ஊர், கழுமலம் முதலிய பன்னிரு பெயர்களைக் கொண்ட சீகாழிப்
பதியாகும்.

     கு-ரை: காய்ந்து - கோபித்து. காலனை - இயமனை. சேந்தனை
-முருகப்பிரானை. பயந்து - பெற்று. பகை - சூரன்படை. (பதி.209. பா.1.
பார்க்க).

     7. பொ-ரை: கொடியபோரில் மகிடாசுரனைக் கொன்று விளங்கும்
நீலியாகிய துர்க்கை சிவபிரான் அடியிணைகளைப் பணிந்து தனது
கொலைப் பழியைப் போக்கிக் கொண்டு நின்ற ஊர், விளங்கும்
மாடவீடுகளைக் கொண்ட சண்பை முதலிய பன்னிரு பெயர்களை உடைய
சீகாழிப் பதியாகும்.

     கு-ரை: மலி - மலிந்த, மிக்க. தேசு - ஒளி. மகிடற்செற்று
-மகிடாசுரனைக் கொன்று. மகிடம் - எருமைக்கடா. நீலி - மாயோள்,
(துர்க்கை) கறுப்பாயி.

     8. பொ-ரை: பூதங்களால் தாங்கப் பெறும் ஆக்கம் மிக்க ஊர்,
நிலைத்துநின்ற மதில்களால் சூழப்பட்ட வெங்குரு முதலான பன்னிரு