பக்கம் எண் :

823

2292.



துன்னங்கொண்ட வுடையான் றுதைந்தவெண் ணீற்றினான்
மன்னுங்கொன்றை மதமத்தஞ் சூடினான் மாநகர்
அன்னந்தங்கு பொழில்சூழ் அகத்தியான் பள்ளியை
உன்னஞ்செய்தமனத்தார்கள் தம் வினையோடுமே.      2
2293.



உடுத்ததுவும் புலித்தோல் பலி திரிந் துண்பதுங்
கடுத்துவந்த கழற்காலன் தன்னையுங் காலினால்
அடுத்ததுவும்பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
றொடுத்தது வுஞ்சர முப்புரந் துகளாகவே.             3
2294.



காய்ந்ததுவு மன்றுகாமனை நெற்றிக் கண்ணினால்
பாய்ந்ததுவுங் கழற்காலனைப் பண்ணி னான்மறை
ஆய்ந்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
ஏய்ந்ததுவு மிமவான் மகளொரு பாகமே.              4


     2. பொ-ரை: தைத்த உடையை அணிந்தவன். வெண்மை செறிந்த
திருநீற்றைப் பூசியவன். பொருந்திய கொன்றை, ஊமத்தை மலர்களைச்
சூடியவன். அப்பெருமான் எழுந்தருளியதும் அன்னங்கள் வாழும்
பொழில்கள் சூழ்ந்ததுமான அகத்தியான்பள்ளியை நினையும் மனம்
உடையவர்களின் வினைகள் நீங்கும்.

     கு-ரை: துன்னம் - தைத்தல். துதைந்த - நெருங்கிய. முற்றப் பூசிய,
‘முழுநீறுபூசிய மூர்த்தி போற்றி’ (தி.6 ப.5 பா.3). ‘முழுநீறு பூசிய முனிவர்’.
உன்னம் - தியானம். மனத்தார்கள் தம் வினை - மனத்தையுடையவர்
வினைகள்.

     3. பொ-ரை: உடுத்துள்ளது புலித்தோல். உண்பது பலியேற்றுத்
திரிந்து. கொன்றது சினந்து வந்த கழலணிந்த காலனைக் காலினால்.
அவ்விறைவன் வாழ்வது பொழில்கள் சூழ்ந்த அகத்தியான்பள்ளி. சரம்
தொடுத்தது துகளாகுமாறு திரிபுரங்களை.

     கு-ரை: உடுத்ததும் தோல், உண்பதும் பலி, காலினால் அடுத்ததும்
காலனை, முப்புரம் துகளாகத் தொடுத்ததும் சரம் என்க. கடுத்து -கோபித்து.

     4. பொ-ரை: அன்று நெற்றிக்கண்ணால் சினந்தது காமனை. பாய்ந்து
கொன்றது கழலணிந்த காலனை. பண்களோடு ஆராய்ந்தது