பக்கம் எண் :

826

2299.



சிரமுநல்ல மதிமத்த முந்திகழ் கொன்றையும்
அரவுமல்குஞ் சடையான் அகத்தியான் பள்ளியைப்
பிரமனோடு திருமாலுந் தேடிய பெற்றிமை
பரவவல்லார் அவர்தங்கள் மேல்வினை பாறுமே.    9
2300.



செந்துவ ராடையினாரும் வெற்றரை யேதிரி
புந்தியி லார்களும் பேசும்பேச்சவை பொய்ம்மொழி
அந்தணன் எங்கள்பிரான் அகத்தியான் பள்ளியைச்
சிந்திமின் நும்வினை யானவைசிதைந் தோடுமே.    10


ஒளியை உடைய தாமரைப்பூவில் வாழும் பிரமன் தலையை, இறுத்ததும்
(-முறித்ததும்). இராவணனுடைய இருபது தோள்களையும்.

     9. பொ-ரை: தலைமாலையையும், பிறையையும், ஊமத்தை மலரையும்,
விளங்கும் கொன்றை மலரையும் பாம்பையும் அணிந்துள்ள சடையினனாகிய
அகத்தியான்பள்ளியில் உறையும் இறைவனைப் பிரமனும் திருமாலும்
தேடிக்காண முடியாத தன்மையைக் கூறிப் பரவ வல்லவர் தங்கள்
மேல்வரும் வினைகள் அழியும்.

     கு-ரை: சிரமும் - தலைமாலையும். நல்லமதி (உம்) - அழகிய
பிறையும். மத்தமும் - ஊமத்தம் பூவும். ‘மத்தங்கமழ்சடை’ (தி.2 ப.205 பா.6).
அரவும் - பாம்பும். ‘அரவம்’ என்ற பாடம் பிழை என்பது முதலடியாலே
விளங்கும். பெற்றிமை - தன்மை. பாறும் - ஓடும்.

     10. பொ-ரை: சிவந்த துவராடையை அணிந்து, ஆடையின்றி
வெற்றுடல்களோடு திரியும் அறிவற்றவர்களாகிய சமண புத்தர்கள் பேசும்
பேச்சுக்கள் பொய்மொழிகளாகும். அவற்றை விடுத்து அழகிய
கருணையாளனும் எங்கள் தலைவனும் ஆகிய அகத்தியான்பள்ளி
இறைவனைச் சிந்தியுங்கள். வினைகள் சிதைந்து ஓடும்.

     கு-ரை: செந்துவர் ஆடை - செங்காவித்துணி. பேசும் பேச்சவை
-சொல்லும் பரசமயக்கோள்கள்.

     அந்தணன் - சிவன். சிந்திமின் - தியானம் புரியுங்கள், நும்
வினையானவை சிதைந்து ஓடும்.