பக்கம் எண் :

830

2305.







விரவுநீறுபொன் மார்பினில்
     விளங்கப்பூசிய வேதியன்
உரவுநஞ்சமு தாகவுண்
     டுறுதிபேணுவ தன்றியும்
அரவுநீள்சடைக் கண்ணியார்
     அண்ணலாரறை யணிநல்லூர்
பரவுவார்பழி நீங்கிடப்
     பறையுந்தாஞ்செய்த பாவமே.    4


தாழ்ந்து தொங்கும் சடையினர். தலைக்கோலம் உடையவர். பிறப்பற்றவர்
என்று அறையணிநல்லூர் இறைவரைக் கைகூப்பித் தொழுபவரே
வலிமைமிக்க மும்மூர்த்திகளும் தொழுது வணங்கும் முக்கண்மூர்த்தன்
திருவடிகளில் அன்புடையவர் ஆவர்.

     கு-ரை: என்பினார் - எலும்பணிந்தவர். கனல்சூலத்தார் - கனலும்
(தீய்க்கும்) சூலப்படை ஏந்தியவர். மதியுச்சியான் - சந்திரசேகரன். பின்பு
இன் ஆல் - பின்பினால், பின்புறத்தில். பின் - பின்புறத்தில், பின்னால் -
பின்னலால் எனலும் பொருந்தும். ‘பின்றாழ்சடை’ (தி.1 ப.71 பா.4 ப.80 பா.2)
‘பின்னுசடைகள்’ (தி.1 ப.74 பா.6) ‘பன்னியி தாழ்சடையார்’ (தி.1 ப.8 பா.10).
பிறங்கும்-விளங்கும். பிஞ்ஞகன் என்பது சடையை அடையாக்கொண்டு
நின்றதால் முடியன் என்ற மட்டில் அமைந்தது. முன்பினார் - வலிமை,
பழமையுடையார். நினைத்தலையுடையவர் எனலுமாம். முன் பின் ஆர்
என்று பிரித்துக் காலத்தையும் இடத்தையும் குறித்துக் கூறலுமாம். என்பினார்
சூலத்தார் உச்சியான் பிஞ்ஞகன் பிறப்பிலி என்று கையால் தொழுவாரே
வரும் தொழும் முக்கண் மூர்த்தி திருவடிக்கு அன்பராவர்.

     4. பொ-ரை: அழகிய மார்பில் திருநீற்றை விரவப்பூசிய வேதியனும்,
வலிய நஞ்சினை அமுதாக உண்டு உலகிற்கு அழியாமை தந்தவனும்,
பாம்பை நீண்ட சடைக்கு முடிக்கண்ணியாகக் கொண்டவனும் ஆகிய
அண்ணல் உறையும் அறையணிநல்லூரைப் பரவுவார் பழி பாவங்கள் நீங்கப்
பெறுவர்.

     கு-ரை: மார்பில் நீறு பூசிய வேதியன் என்றது சிவபிரானை, உரவு
-கடல். அரவு - பாம்பு. கண்ணியார் - தலைமாலையுடையார். பரவுவார்
-வாழ்த்திவணங்குபவர். பழிநீங்கப் பாவம் ஓடும்.