பக்கம் எண் :

834

ஐயமேற்றுணுந் தொழிலரா
     மண்ணலாரறை யணிநல்லூர்ச்
சைவனாரவர் சார்வலால்
     யாதுஞ்சார்விலோம் நாங்களே.    9
2311.







வாக்கியஞ்சொல்லி யாரொடும்
     வகையலாவகை செய்யன்மின்
சாக்கியஞ்சம ணென்றிவை
     சாரேலும்மர ணம்பொடி
ஆக்கியம்மழு வாட்படை
     யண்ணலாரறை யணிநல்லூர்ப்
பாக்கியங்குறை யுடையீரேற்
     பறையுமாஞ்செய்த பாவமே.       10


ஐயமேற்றுண்ணும் தொழிலரும் தலைமையாளரும் ஆகிய அறையணி
நல்லூர்ச் சைவராகிய சிவபெருமானே நமக்குச் சார்வு ஆவார்: வேறு
எதனையும் நாம் சாரோம் என்று எண்ணுக.

     கு-ரை: வெய்ய - வெம்மையுடைய. வெறியராய் - வெறி
பிடித்தவர்போல, செய்வதே அலங்காரம் ஆம் இவை இவை என்பது
செய்வனவே அழகாக்கும் பெற்றிபோலும். அவர் ‘கொண்டதே கோலம்’
என்றலும் அமையும். எருக்கு முதலிய அணிதல், பாம்பணிதல் முதலியவை
நோக்கின், சிவபிரானுக்கு அன்றிப் பிறர்க்கு அவை அலங்காரமாதல்
இன்மை விளங்கும். சைவன்-சிவபிரான். ‘சைவா போற்றி’ (திருவாசகம்.)
‘மான்மறிமழுவொன்றேந்துஞ் சைவன்’ (தி. 4ப.62 பா. 4).
‘சைவத்தசெவ்வுருவன் திருநீற்றன்’ (தி.7 பா. 838)

     10. பொ-ரை: நீண்ட தொடர்களைப் பேசி யாரோடும்
வகையல்லாதவற்றைச் செய்யாதீர். சாக்கியர் சமணர் நெறிகளைச் சாராதீர்.
திரிபுரங்களைப் பொடியாகச் செய்த மழுவாட்படை அண்ணலார் உறைகின்ற
அறையணிநல்லூரை அடைந்து பாக்கியமாகிய தேவையை நிறைவு
செய்துகொள்ள விரும்புவீராயின் அதனை அடைதலே அன்றிப் பாவங்களும்
கழியப்பெறுவீர்.

     கு-ரை: வாக்கியம் - பொருள் முற்றுப்பெற்ற சொற்றொடர். சாரேலும்
- சாராதீர்கள். சாராதேயுங்கள். சாரேல்:- ஒருமை,