2312.
|
கழியுலாங்கடற்
கானல்சூழ்
கழுமலம்அமர்
தொல்பதிப்
பழியிலாமறை ஞானசம்
பந்தனல்லதோர்
பண்பினார்
மொழியினாலறை யணிநல்லூர்
முக்கண்மூர்த்திதன்
றாள்தொழக்
கெழுவினாரவர் தம்மொடுங்
கேடில்வாழ்பதி
பெறுவரே. 11
|
திருச்சிற்றம்பலம்
அதனொடு
உம் சேர்த்து முன்னிலைப் பன்மை யேவலாக்கினர். இது
திருமுறையில் பல இடத்தில் காணப்படும். (தி.2 ப.119 பா.10; தி.3 ப.91
பா.10) காண்க. அரணம் - திரிபுரம். ஆக்கிய மழு. மகர மெய் விரித்தல்
விகாரம். பாக்கியம் குறை - பாக்கியமாகிய இன்றியமையாப் பொருள்.
பாக்கியம் - தெய்வம். (குறள் - 1141) எதுவந்தால் முடிவுறும்? அஃது,
இல்லாமல் குறையாகி அவாவப்படும். படவே குறை என்பதற்கு
முடிக்கப்படும் பொருள், இன்றியமையாப் பொருள் என்று பொருளு
ரைத்தனர் சான் றோர். (குறள்.612)
11.
பொ-ரை: உப்பங்கழிகள் உலாவும் கடற்சோலைகள்
சூழ்ந்த
தொல்பதியாகிய கழுமலத்தில் தோன்றிய குற்றமற்ற மறை வல்ல
ஞானசம்பந்தன் அருளிய பதிகத்தை ஓதும் நற்பண்பினராய் அறையணி
நல்லூரை அடைந்து முக்கண் மூர்த்தியாகிய சிவபிரான் திருவடிகளைத்
தொழுது போற்றப் பொருந்தியவர்கள் குற்றமற்றவர் வாழும் சிவலோகத்தை
அடைவர்.
கு-ரை:
பழி இல்லாமை மறைக்கு அடை. பண்பின் ஆர்
மொழியினால் - இத்திருப்பதிகத்தால். கெழுவினார் - பொருந்தினவர்.
கேடு இல்வாழ்பதி - சிவலோகம். தம்மொடும் பதி பெறுவர் என்றதால்,
தம்மையும் பெறுவர், பதியையும் பெறுவர் என்க. தம்மைப் பெறுதல்
-தம்மையுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார். (சிவஞான. அவையடக்கம்)
என்றவாறு தம்மையுணர்தல். தன்னுயிர்தானறப் பெற் றானை ஏனைய
மன்னுயிரெல்லாந்தொழும் (குறள்.268). பதி - சிவம்.
|