பக்கம் எண் :

854

2330.







ஏறுமால் யானையே சிவிகையந் தளகமீச்
     சோப்பி வட்டின்
மாறிவா ழுடம்பினார் படுவதோர் நடலைக்கு
     மயங்கி னாயே
மாறிலா வனமுலை மங்கையோர் பங்கினர்
     மதியம் வைத்த
ஆறனா ரூர்தொழு துய்யலா மையல்கொண்
     டஞ்ச னெஞ்சே.
                    7



“கொண்டு விண்படர் கருடன்வாய்க் கொடுவரி நாகம்
 விண்ட நாகத்தின் வாயினில் வெருண்டவன் றேரை
 மண்டு தேரையின் வாய்தனில் அகப்படு தும்பி
 வண்டு தேன்நுகர் இன்பமே மானிடர் இன்பம்.”

என்னும் தனிப்பாடல்களையும் ‘வனப்பாங்கிண்றுள் வெம்பாம்பு பற்றும்
விடத் தேரை வாய்வண்டு தேன் வேட்டல் போல் விசித்துக் கொடு
போய்விட............கூற்றை எண்ணாது எண்ணும் வேட்கையெல்லாம் விட..........
.அரங்கன் திருத்தாளில் விழு நெஞ்சமே’ (திருவரங்கத்தந்தாதி. 93)
என்பதையும் துன்பத்துள் துன்பமான உலக வாழ்க்கையில் இருந்து
கொண்டே தனக்கு உடனே வரக்கடவதாகிய துன்பத்தைச் சிறிதும்
நினையாமல் இன்பத்தையே மேன்மேல் அவாவும் பேதைமை
யியல்புக்கு.......கானகத்தில் நீரற்ற பாழ்ங் கிணற்றிலே பாம்பின் வாய்ப்பட்டு
நஞ்சு தலைக்கு ஏறிய தேரையின் வாயில் அகப்பட்டதொரு வண்டு தேனை
விரும்புதலை உவமை கூறினார்’ என்னும் அதன் விளக்கத்தையும் நோக்கி
உணர்க. இதற்குப் பிறர் எழுதியது பொருந்துமா என்று ஆய்க.

     7. பொ-ரை: நெஞ்சே! உலாவரும் பெரிய யானை, சிவிகை, கவசம்,
விருது முதலியவற்றை ஆடைகளை மாற்றுவது போல மாற்றப்படும் பல
பிறவிகள் எடுக்கும் உடலை உடையார் தற்காலிகமாகப் பெறும்
துன்பமயமான வாழ்வைக்கண்டு மயங்குகின்றாய். ஒப்பற்ற அழகிய
தனபாரங்களைக் கொண்ட உமையம்மை பங்கினரும், பிறைமதியையும்
கங்கையையும் சூடிய முடியினரும் ஆகிய ஆரூர் இறைவரைத் தொழுதால்
உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!

     கு-ரை: ஏகாரம் எண்ணுப் பொருட்டு, சிவிகை-பல்லக்கு.