பக்கம் எண் :

873

நிலையாகப் பேணீநீ
     சரணென்றார் தமையென்றும்
விலையாக வாட்கொண்டு
     வேணுபுரம் விரும்பினையே.   10
          * * * * * * * *       11

                   திருச்சிற்றம்பலம்


அடைந்தவர்களை எப்பொழுதும் நும்மைத் தந்து அவர்களைக் கொள்ளும்
விலையீட்டில் ஆட்கொள்ள வேணுபுரத்தைத் நுமக்குரிய தலமாக
விரும்பியுள்ளீர். கு-ரை: நிலையார்ந்த உண்டியினர்-நின்று உண்பவர். அடுத்த
பதிகத்தில் ஒவ்வொரு பாட்டிலும் ஈற்றில் அருளிய திறத்தை நோக்கினால்
உன்பொன்னடியே நிலையாகப்பேணி நீ(யே) சரண் என்றாரை, என்றும்
விலையாக ஆட்கொள்ளும் திறம் வாய்மையாதல் விளங்கும்.

     11. * * * * * * * * *

திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ்.

          சிற்றிற் பருவம்

சுழியா லெரிக்குந் திரையுகைத்த
     சூல்வெண் சங்கு நீலமலர்க்
கழியால் வந்து வயல்புகுதுங்
     காழிக் கரசே முலைசுரந்த
மொழியான் முடியாப் பழம்பொருளை
     முன்னே காட்டி யுலகமெல்லாம்
அழியா வகைவந் தாட்கொண்டாய்
     அடியேஞ் சிற்றில் அழியேலே.

-ஸ்ரீ மாசிலாமணிதேசிக சுவாமிகள்.