பக்கம் எண் :

880

2365.







பாறு புத்தருந் தவமணி
     சமணரும் பலநாள்
கூறி வைத்ததோர் குறியினைப்
     பிழையெனக் கொண்டு
தேறி மிக்கநஞ் செஞ்சடைக்
     கடவுடென் றேவூர்
ஆறு சூடியை யடைந்தன
     மல்லலொன் றிலமே.     10
2366.



அல்ல லின்றிவிண் ணாள்வர்கள்
     காழியர்க் கதிபன்
நல்ல செந்தமிழ் வல்லவன்
     ஞானசம் பந்தன்


அடைகளாயின. செந்து-பெரும்பண்களுள் ஒன்று. ‘செந்து மண்டலி
பிங்கலந்தை. செந்து இனத்து இசை-செந்து என்னும் பண்வகையைச் சார்ந்த
இசையை. ‘செந்திலங்கு மொழியவர்’ (தி.2 ப.3 பா.10) ‘செந்து நேர்மொழி
யார்’ (தி.2 ப.51. பா.11) ‘செந்திசை பாடல்’ (தி.1 ப.114 பா.11) அறுபதம்-
வண்டு, முரல்-ஒலிக்கும். ‘திருத் தேவூர்’ என்று ஆசிரியரே சிவதலங்களை
வழங்குமாறு உபதேசித்தருளியவாறுணர்க.

     10. பொ-ரை: ஓடித் திரியும் ‘புத்தர்களும், தவத்தை மேற்கொண்ட
சமணரும் பலநாள்களாகக் கூறிவரும் இலக்குப் பிழையானது எனத்
தெளிவுற்று, எங்கும் மிகுந்து தோன்றும் நம் செஞ்சடைக் கடவுள் எழுந்
தருளிய தேவூரை அடைந்து கங்கையை அணிந்துள்ள சிவபிரானைச்
சரணாக அடைந்தோம். ஆதலால் அல்லல்கள் சிறிதும் இலரானோம்.

     கு-ரை: பாறுபுத்தர்-ஓடுகின்ற புத்தர்கள். பாறல்-ஓடுதல். தவம் அணி-
தவக்கோலம் அணிந்த. குறி- ‘குண்டர் சாக்கியர் கூறிய தாம் குறியின்மையே
சொலீர்’ பதி.137 பா.10.) தேறி-தெளிந்து.

     11. பொ-ரை: காழிவாழ் மக்களுக்குத்தலைவனும், நல்ல செந்தமிழ்
வல்லவனும் ஆகிய ஞானசம்பந்தன் எல்லையற்ற புகழ் பொருந்திய அழகிய
தேவூரில் விளங்கும் பழமையான இறைவனைப்