பக்கம் எண் :

900

2391.







மதிநுதன் மங்கையோடு வடபா லிருந்து
     மறையோது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென்
     உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்
     கொடுநோய்க ளான பலவும்
அதிகுணம் நல்லநல்ல வவைநல்ல நல்ல
     அடியா ரவர்க்கு மிகவே.             4
2392.



நஞ்சணி கண்டன்எந்தை மடவாள்த னோடும்
     விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென்
     உளமே புகுந்த அதனால்


     4. பொ-ரை: பிறைபோன்ற நுதலை உடைய உமையம்மையாரோடு
ஆலின்கீழ் இருந்து வேதங்களை அருளிய எங்கள் பரமன் கங்கை,
கொன்றைமாலை ஆகியனவற்றை முடிமேல் அணிந்து என் உளம்
புகுந்துள்ள காரணத்தால், சினம் மிக்க காலன், அக்கினி, யமன், யமதூதர்,
கொடியநோய்கள் முதலிய அனைத்தும் மிக்க குணமுடையனவாய்
நல்லனவே செய்யும். அடியவர்களுக்கும் மிகவும் நல்லனவே செய்யும்.

     கு-ரை: வடபால்-ஆலின்கீழ். வடம்-ஆலமரம். ‘கல்லால் நிழற்கீழ்
வாடாமுலை மங்கையும் தானும் மகிழ்ந்து ஈடா உறைகின்ற இடைமருது’
(தி.1 ப.32 பா.1.) வடபக்கம் என்பாருமுளர். கொதி-கோபம், உக்கிரம்.
காலன் - ‘காளமேகந் நிறக்காலனோடு அந்தகன்’ (தி.2 ப.119 பா.6) அங்கி -
அக்கினி நமனொடு தூதர்-இயமனும் இயமதூதரும், ‘மண்ணிடைக்
குரம்பைதன்னை மதித்து நீர் மையல் எய்தில் விண்ணிடைத் தருமராசன்
வேண்டினால் விலக்குவார் ஆர்?-(.தி4 பதி.31 பா.2.) ‘தருமராசற்காய் வந்த
கூற்றினைக்குமைப்பர்’ (தி.4 பதி.49 பா.2.) என்பவற்றால், நமன் (தருமராசன்)
வேறு நமனுடைய தூதராகிய கூற்றுவர் வேறு என்றும் ‘சூலத்தால்
அந்தகனைச் சுருளக்கோத்துத் தொல்லுலகில் பல்லுயிரைக் கொல்லுங்
கூற்றைக் காலத்தால் (-காலால்) உதைசெய்து’ (தி.6 பதி.83 பா.9.) என்பதில்
அந்தகன.் வேறு கூற்று வேறு என்றும் உணர்த்தல் அறிக.

     5. பொ-ரை: நஞ்சணிந்த கண்டனும், எந்தையும்,
உமையம்மையாரோடு விடையேறி வரும் எம் தலைவனுமாகிய
சிவபிரான், இருள்