2429.
|
மேலோடி
நீடு விளையாடல் மேவு
விரிநூலன் வேத முதல்வன்
பாலாடு மேனி கரியானு முன்னி
யவர்தேட நின்ற
பரனூர்
காலாடு நீல மலர்துன்றி நின்ற
கதிரேறு செந்நெல்
வயலிற்
சேலோடு வாளை குதிகொள்ள மல்கு
திருமுல்லை வாயி
லிதுவே.
9 |
2430.
|
பனைமல்கு
திண்கை மதமா வுரித்த
பரமன்ன நம்பன்
அடியே
நினைவன்ன சிந்தை யடையாத தேரர்
அமண்மாய நின்ற
வரனூர் |
ளாகிய உமையம்மை
பங்கனும் ஆகிய எங்கள் அரனது ஊர்,
மலையிலிருந்து சந்தனம் அகில் ஆகியவற்றை அடித்து வந்து விளங்கும்
பொன்னியாற்றின் திரைகள் வீசும் வடகரையில் செறிந்த தேன் அடைகள்
ஆடும் திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும்.
கு-ரை:
உரைவந்த பொன்னின் உருவந்தமேனி உமை-
கட்டளைக்கல்லில் மாற்று உரைக்கப்பெற்ற சிறந்த பொன்னிறம்
பொருந்திய திருமேனியை உடைய உமாதேவியார். தேறல்-தெளிதேன்.
9.
பொ-ரை: திருமேனி நீண்டு ஓடிவிளையாடலைப்
பொருந்திய முப்புரிநூலை உடையவன். வேதமுதல்வன். பிரமனும் திருமாலும்
தேடிக்காணாது திகைக்குமாறு உயர்ந்து நின்றோன். அவனது ஊர், காற்றில்
அசையும் நீலமலர்கள் நிறைந்து நிற்பதாய், கதிர் மிகுந்த செந்நெல்
வயல்களில் சேலும் வாளையும் குதிகொள்ளும் திருமுல்லைவாயிலாகிய
இத்தலமேயாகும்.
கு-ரை:
மேலோடி. . . நூலன்:- திருமார்பில் அனிந்த முப்புரிநூல்
அவனது திருமேனியில் திருத்தோள்மேல் ஓடி நீடும் விளையாடுதல்
மேவுதலை உணர்த்திற்று. விரிநூலன் என்பது சிவபிரான் என்னும்
பொருட்டாய் நின்றதென்றும், அவன் விளையாடல் மேவியவன் என்றும்
கொள்ளலும் பொருந்தும்.
10.
பொ-ரை: பனைபோன்ற திண்ணிய துதிக்கையை உடைய
மதயானையை உரித்த பரமன். நம்பால் அன்புடையவன். தன்
|