பக்கம் எண் :

930

     கு-ரை: அணிகொண்ட கோதையவள் என்பது இத்தலத்து
அம்பிகையின் திருப்பெயர் தணிகொண்ட சிந்தையவர்-விருப்பு
வெறுப்புக்களால் உண்டாகும் வெப்பம் தணிதலை உடைய உள்ளத்தவர்
(தி.1 ப.57 பா.4) (தி.7 ப.8 பா.7) சித்தியார் - 181. என்ப வற்றில்
குறிக்கப்பட்ட மனமே தணி கொண்டதாகும்..

           திருஞானசம்பந்தர் புராணம்

அருமையாற் புறம்பு போந்து வணங்கிஅங் கமரும் நாளில்
திருமுல்லை வாயில் எய்திச் செழுந்தமிழ் மாலை சாத்தி
மருவிய பதிகள் மற்றும் வணங்குவார் மறையோர் ஏத்தத்
தருமலி புகலி வந்து ஞானசம் பந்தர் சார்ந்தார்.

வைகும்அந் நாளிற் கீழ்பால் மயேந்திரப் பள்ளி வாசம்
செய்பொழிற் குருகா வூருந் திருமுல்லை வாயில் உள்ளிட்(டு)
எய்திய பதிகள் எல்லாம் இன்புற இறைஞ்சி ஏத்தித்
தையலாள் பாகர் தம்மைப் பாடினார் தமிழ்ச்சொல் மாலை.

                               -சேக்கிழார்.

ஞானசம்பந்தர் தேவாரத்தில் அகப்பூசை

சினமலி அறுபகை மிகுபொறி
     சிதைதரு வகைவளி நிறுவிய
மனன்உணர் வொடுமலர் மிசைஎழு
     தருபொருள் நியதமும் உணர்பவர்
தனதுஎழில் உருவது கொடு வடைதகுபரன்.....................