பக்கம் எண் :

953

2463.







மையு லாம்பொழில் சூழ்ந்த
     மாமறைக் காடமர்ந் தாரைக்
கையி னாற்றொழு தெழுவான்
     காழியுண் ஞானசம் பந்தன்
செய்த செந்தமிழ் பத்துஞ்
     சிந்தையுட் சேர்க்கவல் லார்போய்ப்
பொய்யில் வானவ ரோடும்
     புகவலர் கொளவலர் புகழே.        11


                   திருச்சிற்றம்பலம்


     11. பொ-ரை: மேகங்கள் உலாவும் பொழில் சூழ்ந்த சிறந்த
திருமறைக்காட்டில் எழுந்தருளிய இறைவரைக் கைகளால் தொழுது
எழுவோனாகிய காழிப்பதிவாழ் ஞானசம்பந்தன் செய்த இச்செந்தமிழ்
பத்தையும் சிந்தையில் பதித்துப் போற்றவல்லவர் பொய்மையற்ற வானவர்
உலகில் அவரோடும் புகவல்லவர் ஆவர். புகழே கொள்ள வல்லவராய்
விளங்குபவர்.

     கு-ரை: மை-மேகம். பொய்யில்வானவர்-அழியாத வீட்டுலகினர்.

திருஞானசம்பந்தர் புராணம்

அன்பினுக் களவு காணார்; ஆனந்த வெள்ளம் மூழ்கி
என்புநெக் குருக நோக்கி இறைஞ்சிநேர் விழுந்து நம்பர்
முன்புநிற் பதுவும் ஆற்றார்; மொழிதடு மாற ஏத்தி
மின்புரை சடையார் தம்மைப் பதிகங்கள் விளம்பிப் போந்தார்.

                                          -சேக்கிழார்.