பக்கம் எண் :

957

மூசு வண்டறை கொன்றை
     முருகன்முப் போதுஞ்செய் முடிமேல்
வாச மாமல ருடையார்
     வர்த்தமா னீச்சரத் தாரே.           5
2469.







தளிரி ளங்கொடி வளரத்
     தண்கய மிரியவண் டேறிக்
கிளரி ளம்முழை நுழையக்
     கிழிதரு பொழிற்புக லூரில்
உளரி ளஞ்சுனை மலரு
     மொளிதரு சடைமுடி யதன்மேல்
வளரி ளம்பிறை யுடையார்
     வர்த்தமா னீச்சரத் தாரே.           6
2470.



தென்சொல் விஞ்சமர் வடசொற்
     றிசைமொழி யெழினரம் பெடுத்துத்
துஞ்சு நெஞ்சிரு ணீங்கத்
     தொழுதெழு தொல்புக லூரில்


     கு-ரை: இதன் முதலடியோடு ஒத்தது முன் (தி.2 ப.90 பா.1.)
உணர்ந்தது. பூச-பூசுதற்கு. நீற்றர்-நீறுடையவர். பூச என்னும் எச்சம்
நீற்றர் என்னும் வினைக்குறிப்பில் உடையர் என்பதோடு முடிந்தது.

     6. பொ-ரை: குளிர்ந்த நீர் நிலைகளை அடுத்து வளரும்
இளங்கொடிகளின் தளிர்கள் கிழியுமாறு வண்டுகள் சரேலென எழுந்து
முழைகள்தோறும் செல்லும் பொழில்கள் சூழ்ந்த புகலூரில் வாழ்பவர்
சுனை நீரில் பூத்த மலர்கள் விளங்கும் சடைமுடியில் பிறை
சூடியவராகிய வர்த்தமானீச்சரத்து இறைவர்.

     கு-ரை: இளமுழை-இளமான். உளர்-அசைகின்ற; சுழல்கின்ற.
தளிர்களையுடைய கொடி, இளங்கொடி. தண்கயம்-குளிர்ந்த நீர் நிலையில்
இரிய-சாய. சுனைமலரும் ஒளிதருஞ்சடை. சடைமுடி மேல் பிறை உடையார்.

     7. பொ-ரை: அடியவர் தமிழிலும் வடமொழியிலும் திசை
மொழிகளிலும் அழகிய யாழ் நரம்பை மீட்டித் தங்கள் மனத்திருள்