2472.
|
சீர
ணங்குற நின்ற
செருவுறு திசைமுக னோடு
நார ணன்கருத் தழிய
நகைசெய்த சடைமுடி நம்பர்
ஆர ணங்குறு முமையை
யஞ்சுவித் தருளுதல் பொருட்டால்
வார ணத்துரி போர்த்தார்
வர்த்தமா னீச்சரத் தாரே.
9 |
|
|
2473.
|
கையி
லுண்டுழல் வாருங்
கமழ்துவ ராடையி னால்தம்
செய்யைப் போர்த்துழல் வாரு
முரைப்பன மெய்யென விரும்பேல்
மெய்யில் வாளைக ளோடு
செங்கயல் குதிகொளும் புகலூர்
மைகொள் கண்டத்தெம் பெருமான்
வர்த்தமா னீச்சரத் தாரே. 10
|
9. பொ-ரை: வர்த்தமானீச்சரத்து இறைவர்,
சிறந்த தெய்வத் தன்மை
உடையவர்களாய் யார் தலைவர் என்பதில் மாறுபட்டவர்களாய்த் தம்முட்
செருச்செய்த திருமால் பிரமர்களின் கருத்தழியுமாறு அவர்களிடையே
தோன்றி நகை செய்தவர். உமையம்மையை அஞ்சுவிக்கும்பொருட்டு அவள்
எதிரே யானையை உரித்தவர்.
கு-ரை: அணங்கு-தெய்வம், அழகுமாம்.
செரு-இருவரும்,
சிவபிரானைக் காண்பேன் என்று சொல்லி நிகழ்த்திய போர். அவனொடு
நாராயணனும் கருத்தழிய நம்பர் நகைசெய்தார். அஞ்சுவித்து-அஞ்சச்செய்து.
வாரணத்து உரி-யானைத்தோல்.
10. பொ-ரை: வாளைமீன்களோடு கயல்கள்
குதித்து
விளையாடும் வயல்களைக் கொண்ட புகலூரில் நீல கண்டராய் விளங்கும்
வர்த்தமானீச்சரத்து இறைவர் புகழே மெய்ம்மமையானவை. கையில் உணவு
ஏற்று உண்ணும் சமணரும் துவராடை போர்த்த புத்தரும் கூறும் உரைகளை
மெய்யெனக் கருதேல்.
கு-ரை: ஆடையினால் தம் உடம்பைப் போர்த்து
உழல்வார்
|