பக்கம் எண் :

961

93. திருத்தெங்கூர்

பதிக வரலாறு:

     திருஞானசம்பந்த நாயனார், திருவாரூர், திருக்காயில், தேவூர்,
திருநெல்லிக்கா, திருக்கைச்சினம் ஆகிய தலங்களை வழிபட்டு
வந்தகாலத்தில், தெங்கூரை அணைந்து பரவிப் பாடியது இத்திருப்பதிகம்.

                 பண்: பிந்தைக்காந்தாரம்

ப.தொ.எண்: 229   பதிக எண்: 93

                   திருச்சிற்றம்பலம்

2475.







புரைசெய் வல்வினை தீர்க்கும்
     புண்ணியர் விண்ணவர் போற்றக்
கரைசெய் மால்கடல் நஞ்சை
     உண்டவர் கருதலர் புரங்கள்
இரைசெய் தாரழ லூட்டி
     யுழல்பவ ரிடுபலிக் கெழில்சேர்
விரைசெய் பூம்பொழில் தெங்கூர்
     வெள்ளியங் குன்றமர்ந் தாரே.     1
2476.



சித்தந் தன்னடி நினைவார்
     செடிபடு கொடுவினை தீர்க்கும்
கொத்தின் றாழ்சடை முடிமேற்
     கோளெயிற் றரவொடு பிறையன்


     1. பொ-ரை: மணம் கமழும் அழகிய பொழில் சூழ்ந்த தெங்கூரில்
வெள்ளியங்குன்று எனப்பெறும் கோயிலில் அமர்ந்த இறைவர் துன்பம் தரும்
வலிய வினைகளைப் போக்கும் புண்ணியர். விண்ணவர் போற்றக் கடலில்
தோன்றிய நஞ்சினை உண்டவர். முப்புரம் எரித்தவர். இடுபலிக்கு உழல்பவர்.

     கு-ரை: ஆரழலுக்கு இரையாச் செய்து ஊட்டி, இடுபலிக்கு உழல்பவர்
அமர்ந்தார் என்றார். தென்கு (தெங்கு) + ஊர் = தெங்கூர்.

     2. பொ-ரை: தாழ்ந்த பொழில் சூழ்ந்து விளங்கும் தெங்கூரில்
வெள்ளியங்குன்றமர்ந்த இறைவர், மனம் ஒன்றி நினைக்கும்