|
பத்தர்
தாம்பணிந் தேத்தும்
பரம்பரன் பைம்புனல் பதித்த
வித்தன் தாழ்பொழில் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே. 2 |
2477.
|
அடையும்
வல்வினை யகல
அருள்பவ ரனலுடை மழுவாட்
படையர் பாய்புலித் தோலர்
பைம்புனற் கொன்றையர் படர்புன்
சடையில் வெண்பிறை சூடித்
தார்மணி யணிதரு தறுகண்
விடையர் வீங்கெழில் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே. 3 |
அடியவர்களின் கொடுவினைகளைத்
தீர்ப்பவர். கொத்தாக விளங்கும்
சடைமுடிமேல் அரவோடு பிறையைச் சூடியவர். பக்தர்கள் பணிந்தேத்தும்
பரம்பரர். நீரில் பதித்த விதை போன்றவர்.
கு-ரை:
தன் அடி சித்தம் நினைவார் வினை என்றியைக்க.
சித்தத்தில் நினைவார். செடிபடு-பாவத்தாலுண்டான. பிறையன் என்பது
சிவனென்னும் பெயரளவாய் நின்று, தீர்க்கும் எனுமெச்சத்தைக் கொண்டது.
கோள்-வலிமை, கொலை. புனல் பதித்த வித்தன்-நீரில் பதியச்செய்த
விதையானவன். (தி.6 ப.15 பா.2) (திருவாசகம் 253)
3. பொ-ரை:
அழகுமிக்க தெங்கூரில் வெள்ளியங்குன்றில்
விளங்கும் பெருமானார், நம்மை அடையும் வலிய வினைகளைத் தீர்ப்பவர்.
அனல்போன்ற மழுப்படையை உடையவர். புலித்தோல் உடுத்தவர்.
கொன்றையணிந்த சடைமேல் பிறைசூடி மணி கட்டிய விடைமீது வருபவர்.
கு-ரை:
வினை அகல அருள்பவர். விடை எருதுக்கு அதன்
கழுத்தில் மணிகட்டுதல் உண்மையான். மணி அணிதிரு விடை எனப்பட்டது.
தறுகண்-கொடுமை; அஞ்சத் தக்கவற்றிற்கு அஞ்சாமை தறுகணன் (நன்னூல்)
கண் என்பதன் முன் சில முதனிலைகள் சேர்ந்து வெவ்வேறு பொருள்
பயத்தலை-அலக்கண். புண்கண், இடுக்கண் (இடுஙப்குகண்) வன்கண்
முதலியவற்றிற் காண்க.
|