பக்கம் எண் :

964

2480.







தொல்லை வல்வினை தீர்ப்பார்
     சுடலைவெண் பொடியணி சுவண்டர்
எல்லி சூடிநின் றாடும்
     இறையவ ரிமையவ ரேத்தச்
சில்லை மால்விடை யேறித்
     திரிபுரந் தீயெழச் செற்ற
வில்லி னார்திருத் தெங்கூர்
     வெள்ளியங் குன்றமர்ந் தாரே.     6
2481,







நெறிகொள் சிந்தைய ராகி
     நினைபவர் வினைகெட நின்றார்
முறிகொண் மேனிமுக் கண்ணர்
     முளைமதி நடுநடுத் திலங்கப்
பொறிகொள் வாளர வணிந்த
     புண்ணியர் வெண்பொடிப் பூசி
வெறிகொள் பூம்பொழில் தெங்கூர்
     வெள்ளியங் குன்றமர்ந் தாரே.     7


சிறையணிபறவை கழித்த வெண்டலை-பிரமகபாலம். அன்னப் பறவையான
காரணம் பற்றியது.

     6. பொ-ரை: திருத்தெங்கூர் வெள்ளியங்குன்றமர்ந்த இறைவர்,
பழவினை தீர்ப்பவர். சுடலைப் பொடி பூசியவர். திங்களை முடியில்சூடி
நின்று ஆடுபவர். இமையவர் ஏத்த விடை மீது ஏறிச் சென்று திரிபுரம்
எரித்த வில்லினர்.

     கு-ரை: தொல்லை வினை-பூர்வகர்மம், பிராரப்தம், சஞ்சிதம்
இரண்டும், சுவண்டர்:- சு=அண்டர் நல்லதேவர் எனவும் இடனில்லை
‘சுந்தரராய்த் தூமதியம் சூடுவது சுவண்டே (தி.7 பா.470.) என்பதுகொண்டு
முன்பொருத்தம் என்றேம். அது இங்குப் பொருந்தாது. எல்லி-
தண்ணொளியுடைய திங்கள். எல்-ஒளி. சில்லை-இழிவு. பாசக்கடற்குளே
வீழ்கின்றதே இழிவு. வில்லினார்-மேருமலையாகிய வில்லையுடையாவர்.

     7. பொ-ரை: வெண்ணீறணிந்தவராய் மணம் கமழும் பொழில்
சூழ்ந்த திருத்தெங்கூரில் வெள்ளியங்குன்றில் எழுந்தருளிய இறைவர்,