திருஞானசம்பந்தர்
புராணம்
நம்பர்மகிழ்
திருவாரூர் வணங்கிப் போந்து
நலங்கொள்திருக் காறாயில் நண்ணி ஏத்திப்
பைம்புனல்மென் பணைத்தேவூர் அணைந்து போற்றிப்
பரமர்திரு நெல்லிக்காப் பணிந்து பாடி
உம்பர்பிரான் கைச்சினமும் பரவித் தெங்கூர்
ஓங்குபுகழ்த் திருக்கொள்ளிக் காடும்போற்றிச்
செம்பொன்மதில் கோட்டூரும் வணங்கி ஏத்தித்
திருமலிவெண் டுறைதொழுவான் சென்று சேர்ந்தார்.
ஆளுடையபிள்ளையார்
துதி
காழியர்
தவமே! கவுணியர் தனமே! கலைஞானத்து
தாழிய கடலே! அதனிடை அமுதே! அடியார்முன்
வாழிய வந்திம் மண்மிசை வானோர் தனிநாதன்
ஏழிசை மொழியாள் தன்திருவருள்பெற்றனை என்பார்.
-சேக்கிழார்.
|