பக்கம் எண் :

970

முடியு மாயிர முடையார்
     மொய்குழ லாளையு முடையார்
வடிவு மாயிர முடையார்
     வாழ்கொளி புத்தூ ருளாரே.           3
2489.







பஞ்சி நுண்டுகி லன்ன
     பைங்கழற் சேவடி யுடையார்
குஞ்சி மேகலை யுடையார்
     கொந்தணி வேல்வல னுடையார்
அஞ்சும் வென்றவர்க் கணியார்
     ஆனையி னீருரி யுடையார்
வஞ்சி நுண்ணிடை யுடையார்
     வாழ்கொளி புத்தூ ருளாரே.           4


வையும் பலவேறு வகைப்பட்டவை. பலவேறு வண்ணங்கள் கொண்டவர்.
பலவாய முடிகளை உடையவர், உமையம்மையை இடப்பாகமாகக்
கொண்டவர். பலவேறு வடிவங்கள் கொண்டவர்.

     கு-ரை: நுண்ணியர்:- ‘நோக்கரிய நோக்கே நுணுக்கரிய
நுண்ணுணர்வே’ திருவாசகம். 1 அடி: 76.

     4. பொ-ரை: வஞ்சிக்கொடி போன்ற நுண்ணிய இடையினை
உடைய மகளிர் வாழும் வாழ்கொளிபுத்தூர் இறைவர், பஞ்சினால்
இயன்ற துகில் போன்ற சேவடிகளை உடையவர். சடைமுடியில்
ஆடையைத்தரித்தவர். பூங்கொத்துக்கள் சூடிய வேலை வெற்றிக்கு
அடையாளமாகக் கொண்டவர். ஐம்பொறிகளை வென்றவர்க்கு
அணிமையில் இருப்பவர். ஆனைத்தோல் போர்த்தவர்.

     கு-ரை: சேவடியின் மென்மை உணர்த்தப்பட்டது. குஞ்சி
மேகலையுடையார்:- சைவத் துறவியர் சடைமுடி மறைக்கும் கல்லாடையைக்
குறித்ததுபோலும். குஞ்சிமேற் கலையுடையார் என்றிருந்ததோ? மகளிர்
இடையில் அணிவது மேகலை. இங்குக் குஞ்சி (தலைமயிர்) மேல் உடையது
மேகலை என்று குறிக்கின்றது.

     கொந்து-கோபம். (ஞானாமிர்தம்). அஞ்சும்வென்றவர்:- ‘பொறிவாயில்
ஐந்தவித்தார்’. இடைக்கு உவமை வஞ்சிக்கொடி.