பக்கம் எண் :

989

சேலும் வாளையுங் கயலுஞ்
     செறிந்துதன் கிளையொடு மேய
ஆலுஞ் சாலிநற் கதிர்கள்
     அணிவயற் காழிநன் னகரே.         9
2516.







புத்தர் பொய்மிகு சமணர்
     பொலிகழ லடியிணை காணுஞ்
சித்த மற்றவர்க் கிலாமைத்
     திகழ்ந்தநற் செழுஞ்சுடர்க் கூராஞ்
சித்த ரோடுநல் லமரர்
     செறிந்தநன் மாமலர் கொண்டு
முத்த னேயரு ளென்று
     முறைமைசெய் காழிநன் னகரே.      10


பக்கத்தையும் காண மாட்டாத வகையில் தோன்றி நின்ற பரஞ்சுடராகிய
சிவபிரானது பதி, சேல், வாளை, கயல் ஆகியன தம் கிளையொடு செறிந்து
வாழ்வதும், ஆலும் நெற்கதிர்களைக் கொண்டது மான அணிவயல்களை
உடைய காழி நன்னகராகும்.

     கு-ரை: பாலும் காண்பு அரிதாய பரஞ்சுடர்-தனது பக்கத்தையும்
காண்டற்கு எளிதல்லாத மெய்யொளி சேல், வாளை, கயல் என்பன
வெவ்வேறு வகைமீன்களாதலை அறியாமல் எழுதியுள்ள இடம் பல உள.
ஆலும்சாலி-ஆடுகின்ற நெல்.

     10. பொ-ரை: அழகிய கழலணிந்த திருவடிகளைக் காணும் மனமற்ற
பொய்மைமிக்க புத்தர், சமணர் ஆகியவர்க்கு இல்லாதவாறு திகழ்கின்ற
நற்செழுஞ்சுடர்க்கு ஊர், சித்தர்களும், அமரர்களும் முறையோடு செறிந்த
நல்ல மலர்களைக் கொண்டு அருச்சித்து “முத்தனே அருள்” என வேண்டி
நிற்கும் காழி நன்னகராகும்.

     கு-ரை: ‘பொய்மிகு’ என்பது இடைநிலை விளக்கு. பொலி கழல்
இணைகாணும் சித்தம் அற்றவர்க்கு-பொன்போல் ஒளிசெய்யும் கழல்
அணிந்த இரண்டு திருவடிகளையும் உணரும் உள்ளம் ஒழிந்த
அப்புத்தர்க்கும் சமணர்க்கும் இல்லாமை-பெறுதல் இல்லாதபடி, திகழ்ந்த
நல் செழுஞ்சுடர்க்கு-சிவனடியார்க்கு விளங்கிய நல்ல செழித்த ஒளியாகிய
சிவபிரானுக்கு. சித்தரோடு அமரர் மலர்கொண்டு