பக்கம் எண் :

993

2521.







நச்சிநீர் பிறன்கடை
     நடந்துசெல்ல நாளையும்
உச்சிவம் மெனும்முரை
     உணர்ந்துகேட்ப தன்முனம்
பிச்சர்நச் சரவரைப்
     பெரியசோதி பேணுவார்
இச்சைசெய்யு மெம்பிரான்
     எழில்கொள்காழி சேர்மினே.         4
2522.



கண்கள்காண் பொழிந்துமேனி
     கன்றியொன்ற லாதநோய்
உண்கிலாமை செய்துநும்மை
     யுய்த்தழிப்ப தன்முனம்


தோற்றும் கண்ணென்னும் உறுப்பைப் பற்றித் தோன்றிய பெயர்களாதல்
அறிக. ஆறும்-சுவதந்திரம் முதலிய அறுகுணங்களும் எனக்கொண்டு,
அவற்றால் ஓர்தற்குரிய சடையுடையான் எனல் சிறக்கும்
சடைஞானமயமாகும். “நுண்சிகைஞானமாம்” (திருமந்திரம்)

     4. பொ-ரை: பொருளை விரும்பிப் பிறர் மனைவாயிலை நடந்து
சென்று அடையக்கண்டும் அச்செல்வர் ‘நாளை நண்பகற்போதில் வருக
‘எனக் கூறும் உரையைக் கேட்டு வருந்துவதன் முன்னம் நம் மேல்
ஈடுபாடுடையவரும், விடம் பொருந்திய பாம்பை அரையில் கட்டிய பெரிய
ஒளி வடிவினரும் வழிபடுவாரிடம் அன்பு செய்யும் எம்பிரானாரும் ஆகிய
சிவபிரானது அழகிய காழிப்பதியை அடைவீர்களாக.

     கு-ரை: இரப்பவர் பிறர் கடைவாயில் நின்று “இடுக” என்று
இரக்க அவர் “நாளை நண் பகலில் வருக” என்று சொல்லும் சொல்லைக்
கேட்டுணர்ந்து வருந்தும் நிலையெய்தும் முன்னரே சிவபிரான்
திருக்காழியைச் சேருங்கள்.

     5. பொ-ரை: கண்கள் காட்சி தவிர்ந்து உடல் கன்றி ஒன்றல்லாத
பல நோய்கள் நும்மைத் தாக்கி அழிப்பதற்கு முன்னமே விண்ணகத்தேவர்
உய்யக் கடலிடைத் தோன்றிய நஞ்சினை உண்ட முக்கண்ணராகிய எம்
தலைவர் விளங்கும் காழிப்பதியை அடைவீர்களாக.

     கு-ரை: காண்பு-காட்சி, “காண்பரிதாய பரசுடர்” “காம்பி
னொடுநேத்திரங்கள் பணித்தருளவேண்டும் “காண்பினிய மணிமாடம்”
(தி.7 ப.46 பா.2,3) “கண்கள் காண்பொழிந்து”.