|
விண்குலாவு
தேவருய்ய
வேலைநஞ் சமுதுசெய்
கண்கள்மூன் றுடையவெம்
கருத்தர்காழி சேர்மினே. 5 |
2523.
|
அல்லல்வாழ்க்கை
யுய்ப்பதற்
கவத்தமேபிறந்துநீர்
எல்லையில் பிணக்கினிற்
கிடந்திடா தெழும்மினோ
பல்லில்வெண் டலையினிற்
பலிக்கியங்கு பான்மையான்
கொல்லையேற தேறுவான்
கோலக்காழி சேர்மினே. 6 |
|
*
* * * * * * * 7 |
2524.
|
பொய்மிகுத்த
வாயராய்ப்
பொறாமையோடு சொல்லுநீர்
ஐமிகுத்த கண்டரா
யடுத்திரைப்ப தன்முனம் |
6.
பொ-ரை: துன்பமயமான வாழ்க்கையை நடத்துதற்கு வீணாகப்
பிறந்து, நீர் எல்லையில்லாத மாறுபாடுகளில் கிடந்திடாது புறப்படுவீர்களாக.
பல்லில்லாத வெண்டலையில் பலியேற்கத் திரிதற்கு முல்லை நிலத்து
ஆனேற்றில் ஏறிச் செல்வோனாகிய சிவபிரானது அழகிய காழிப்பதியை
அடைவீர்களாக.
கு-ரை:
அவத்தம்-(அபத்தம்) தவறு பொய். பலிக்கு இயங்கு
பான்மையான், இயங்குதல்-நடத்தல்.
7. * * *
* * * * *
8. பொ-ரை:
மிகுதியாகப் பொய் பேசும் வாயினராய்ப்
பொறாமையோடு பேசும் நீர், கோழைமிகுந்த கண்டத்தினராய் இரைப்பு
அடைதற்கு முன்னரே, கரிய மேனியனாகிய இராவணனை மலையின் கீழ்
நெரித்தவனும், படம் பொருந்திய பாம்பினை அரையில் கட்டிய பரமனும்
ஆகிய சிவபிரானது காழியை அடைவீர்களாக
|