பக்கம் எண் :

1012திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

காடுபதி யாகநட மாடிமட
     மாதொடிரு காதிற்
றோடுகுழை பெய்தவர்த மக்குறைவு
     தோணிபுர மாமே.                   10

3678. துஞ்சிருளி னின்றுநட மாடிமிகு
       தோணிபுர மேய
மஞ்சனைவ ணங்குதிரு ஞானசம்
     பந்தனசொல் மாலை
தஞ்சமென நின்றிசைமொ ழிந்தவடி
     யார்கள்தடு மாற்றம்
வஞ்சமிலர் நெஞ்சிருளு நீங்கியருள்
     பெற்றுவளர் வாரே.                  11

 திருச்சிற்றம்பலம்


கொண்டு, நடனமாடி, உமாதேவியோடு கூடி,
இருகாதுகளிலும் முறையே தோடும், குழையும் அணிந்தவராகிய சிவ
பெருமான் வீற்றிருந்தருளும் தலம் திருத்தோணிபுரம் ஆகும்.

     கு-ரை: மூடு துவராடையர் - துவர் ஆடை போர்ப்பவர்களாகிய
புத்தர். வேட நிலைகாட்டும் அமண் ஆதர் - தமது வேடமாகிய
ஆடையணியாத் தன்மையைப்போலவே தமது ஞானநிலையும் எனக்காட்டும்
சமணர்களாகிய அறிவிலிகள். அம்மொழி - அவர் மொழியை. கெடுத்து -
நீக்கி. அக்காடு - அத்தகைய மயானம். பதியாக - இருப்பிடமாகக்கொண்டு,
நடம் ஆடி. மடமாதோடு (கூடி) - அர்த்தநாரீசுர வடிவமாய்.
இருகாதில்-இருகாதுகளிலும். முறையே, தோடும், குழையும் பெய்தவர் -
அணிந்தவராகிய சிவபெருமானுக்கு. உறைவு - வசிக்கும் இடம்,
தோணிபுரமாம். அடைவினால்- முறைப்படி. அதைச் சேர்வீர்களாக என்பது
அவாய் நிலை. ஆடையர் ஆதர் கேடுபல சொல்லிடுவர் அம்மொழி
கெடுத்து அடைவினால் அதனைச் சேர்வீர்களாக என்க. அல்லது கெடுத்த
அடைவினான் எனப்பிரித்து அடைவினான் - சிவபெருமான் எனலும் ஆம்.

     11. பொ-ரை: அனைத்துலகும் ஒடுங்கிய பிரளயம் எனப்படும்
பேரிருளில் நின்று நடனமாடுபவனாய்ப், புகழ்மிகுந்த திருத்தோணிபுரத்தை
விரும்பி வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானை வணங்கித்