பக்கம் எண் :

1168திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

செல்வறநீண்டெஞ் சிந்தைபொண்ட
     செல்வ ரிடம்போலுந்
தொல்பற வைசுமந் தோங்கு செம்மைத்
     தோணி புரந்தானே.                   9

3877. குண்டிகை பீலி தட்டோடு நின்று
       கோசரங் கொள்ளியரும்
மண்டைகை யேந்தி மனங்கொள் கஞ்சி
     யூணரும் வாய்மடிய
இண்டை புனைந்தெரு தேறிவந்தெ
     னெழில்கவந் தாரிடமாம்
தொண்டிசை பாட லறாத தொன்மைத்
     தோணி புரந்தானே.                   10


உருக்கொண்டு கீழே அகழ்ந்து கென்றும், அன்னப் பறவையாய்
உருவெடுத்தும், காணற்கரியராய் நெருப்புருவாய் நீண்டு எம் உள்ளத்தைக்
கவர்ந்த செல்வரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், தொன்மையான
பறவைகள் சுமந்த ஓங்கியுள்ள நன்னெறி மிக்க திருத்தோணிபுரம் என்னும்
திருத்தலமாகும்.

     கு-ரை:பறவைக்கொடி - கருடக்கொடி. பறவை - பொதுப் பெயர்,
சிறப்பிப்பெயர்ப் பொருளில் வந்தது. பல்வறவைப்படியாய் - பலபறவைகளும்
ஓருருவுகொண்டு பறந்தாற்போல. உயர்ந்தும் - உயரப் பறந்து சென்றும்,
உயர்ந்து பொதுவினை. சிறப்புவினைப் பொருளில் வந்தது. ‘உயர்ந்தும்
பணிந்தும் உணரான’ என இத் தொடர் திருக்கொவை யாரினும் வருவது;
இத்தொடர் இங்கு எதிர் நிரனிறைப் பொருளில் வந்தது. செல்வு - செல்லுதல்.
வு தொழிற்பெயர் விகுதி, துணிவு, பணிவு என்பவற்றிற்போல, “தொல் பறவை
சுமந்து ஓங்கு தோணிபுரம்“ “நின்பாதம் எல்லாம் நாலஞ்சு புள்ளினம்
ஏந்தினவென்ப” - அரசர் அருள்மொழி.

     10.பொ-ரை:கமண்டலம், மயில்தோகை, தடுக்கு ஆகிய வற்றுடன்
மலைகளில் வசிக்கின்ற சமணர்களும், மண்டை என்னும் உண்கலத்தில்
கஞ்சிபெற்றுப் பருகும் புத்தர்களும் பேசுகின்ற வார்த்தைகள் அடங்க,
இண்டை மாலை புனைந்து, இடப வாகனத்திலேறி எனது அழகைக் கவர்ந்த
சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், தொண்டர்களின் இசைப்பாடல்கள்
நீங்காத பழமைவாய்ந்த