3984. |
சுரபுரத்தினைத்
துயர்செய்தாரகன் |
|
துஞ்சவெஞ்சினக்
காளியைத்தருஞ்
சிரபுரத்துளா னென்னவல்லவர்
சித்திபெற் றவரே. 7 |
3985. |
உறவுமாகியற்
றவர்களுக்குமா |
|
நெதிகொடுத்துநீள்
புவியிலங்குசீர்ப்
புறவமாநகர்க் கிறைவனேயெனத்
தெறகிலா வினையே.
8 |
உமாதேவியை ஒரு பாகமாகக்
கொண்ட சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற
திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தைப் தொழும் மக்கள்மேல் பிணி
முதலிய துன்பங்கள் உடம்பைப் பற்றி நில்லாமல் விலகிவிடும்.
கு-ரை:
ஏந்து - படம் விரிக்கும். அரா எதிர் - பாம்பிற்கு ஒப்பு.
வாய்ந்த - பொருந்திய. நுண்ணிடை - சிற்றிடையையும். பூ - பூவையணிந்த.
தண் - குளிர்ந்த. ஓதியாள் - கூந்தலையும் உடைய அம்பிகை. வினை -
பிணி முதலிய துன்பங்கள். மேனிமேல் சேர்ந்திரா - உடம்பைப்பற்றி நில்லா,
விலகிவிடும் என்பது.
7.பொ-ரை:
தேவருலகத்தைத் துன்புறுத்திய தாரகாசுரனைக்
கொல்லும்படி வெஞ்சினம் கொண்ட காளியை அம்பிகையின் அம்சமாகத்
தோற்றுவித்தருளிய திருச்சிரபுரத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானைப்
போற்றி வழிபடுபவர்கள் அட்டமாசித்திகள் அனைத்தும் பெறுவர்.
கு-ரை:
சுரபுரத்தினை - தேவருலகை. துயர்செய் - துன்புறுத்திய
(தாரகன்) அசுரர்களுக்குப் பற்றுக் கோடாயிருந்த மகிடாசுரன் ஒழியத்
துர்க்கையை அம்பிகையின் அம்சத்தினின்றும் தோற்றுவித்தருளிய,
சிரபுரத்திலுள்ள சிவன் என்ன அட்டமா சித்திகளும் கைகூடும். புரம் -
இங்கு உலகு என்னும் பொருளில் வந்தது. 8.பொ-ரை: வறியவர்கட்கு
உறவினராகி அவர்கட்கு மாபெருஞ் செல்வத்தைக் கொடுத்து அருள்
செய்கின்ற, இந்த நீண்டபூமியில் மக்கள் புகழுடன் விளங்குகின்ற திருப்
புறவம் என்னும் மாநகரில் வீற்றிருந்
|