3988. |
விச்சையொன்றிலாச்
சமணர்சாக்கியப் |
|
பிச்சர்தங்களைக்
கரிசறுத்தவன்
கொச்சைமாநகர்க் கன்புசெய்பவர்
குணங்கள் கூறுமினே. 11 |
3989. |
கழுமலத்தினுட்
கடவுள்பாதமே |
|
கருதுஞானசம்
பந்தனின்தமிழ்
முழுதும்வல்லவர்க் கின்பமேதரு
முக்கணெம் மிறையே. 12 |
திருச்சிற்றம்பலம்
11.
பொ-ரை: மெய்யுணர்வு தரும் கல்வியறிவு இல்லாத சமணர், புத்தர்களாகிய
பித்தர்களின் குற்றங்களை நீக்கிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கொச்சை
மாநகரிடத்து அன்பு செய்பவர்களுடைய குணங்களை எடுத்துக் கூறுங்கள்.
கு-ரை:
விச்சை யொன்று இலா - மெய்யுணர்வு வரும் கல்வியறிவு ஒரு சிறிதுமில்லாத. பிச்சர்
பித்தர் என்பதன் போலி. கரிசு அறுத்தவன் - தீமையாகிய வேரையறுத்தவன், அன்பு செய்பவர்
குணங்கள் கூறுமின்! நல்லார் குணங்களுரைப்பதுவும் நன்றே (மூதுரை.8.)
12.
பொ-ரை: திருக்கழுமலம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற
கடவுளாகிய சிவபெருமானின் திருவடிகளையே தியானிக்கின்ற ஞானசம்பந்தனின் இத்தமிழ்மாலையை
முழுமையாக ஓதவல்லவர்கட்கு முக்கண் இறையாகிய அச்சிவபெருமான் அனைத்து இன்பங்களையும்
தந்தருள்வான்.
கு-ரை:
திருக்கழுமலத்துள் கடவுள் பாதத்தைக் கருதிய ஞானசம்பந்தனின் தமிழ் வல்லவர்க்கு முக்கண்
எம்மிறை இன்பமே தரும் என்பது இப்பாட்டின் பொருள்கோள்.
|