3994. |
போதகந்தனை
யுரிசெய்தோன்புய |
|
னேர்வரும்பொழின்
மிழலைமாநகர்
ஆதரஞ்செய்த வடிகள்பாதம்
அலாலொர்பற் றிலமே.
5 |
3995. |
தக்கன்வேள்வியைச்
சாடினார்மணி |
|
தொக்கமாளிகை
மிழலைமேவிய
நக்கனாரடி தொழுவர் மேல்வினை
நாடொறுங் கெடுமே. 6 |
3996.. |
போரணாவுமுப்
புரமெரித்தவன் |
|
பொழில்கள்சூழ்தரு
மிழலைமாநகர்ச்
சேருமீசனைச் சிந்தைசெய்பவர்
தீவினை கெடுமே. 7 |
5.
பொ-ரை: செருக்குடன் முனிவர்களால் கொடுவேள்வியினின்றும்
அனுப்பப்பட்ட மதங்கொண்ட யானையின் தோலை உரித்த சிவபெருமான்,
மேகம்படியும் சோலைகளையுடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில்
விரும்பி வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமானின் திருவடிகளைத்தவிர
வேறு பற்று எதுவும் எமக்கு இல்லை.
கு-ரை:
போதகம் - யானை. புயல் நேர் வரும் - மேகங்கள் படியும்.
ஆதரம் செய்த அடிகள் - விரும்பித் தங்கிய சிவபெருமான்.
6.
பொ-ரை: சிவபெருமான், தக்கன் வேள்வியைத் தகர்த்தவர்.
இரத்தினங்கள் பதிக்கப்பெற்ற மாளிகைகளையுடைய திருவீழிமிழலை
என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் திகம்பரரான சிவபெருமானின்
திருவடிகளை நாள்தோறும் தொழுபவர்கட்கு மேல்வினை உண்டாகாது.
கு-ரை:
சாடினார் - மோதி அழித்தார். மணி தொக்க மாளிகை -
இரத்தினங்கள் பதிக்கப் பெற்ற மாளிகை. நக்கனார் - ஆடையில்லாதவர்,
தொழுவார்மேல் - தொழுவார்கள் இடத்து.
7.
பொ-ரை: போர்க்குணத்தை விரும்பி அதனை மேற்கொண்ட
அசுரர்களின் முப்புரங்களை எரித்த சிவபெருமான், சோலைகள்
|