3997. |
இரக்கமிஃறொழி
லரக்கனாருட |
|
னெருக்கினான்மிகு
மிழலையானடி
சிரக்கொள்பூவென வொருக்கினார்புகழ்
பரக்குநீள் புவியே. 8 |
3998. |
துன்றுபூமகன்
பன்றியானவ |
|
னொன்றுமோர்கிலா
மிழலையானடி
சென்றுபூம்புன னின்றுதூவினார்
நன்றுசேர் பவரே. 9 |
சூழ்ந்த திருவீழிமிழலை
என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.
அப்பெருமானைச் சிந்தித்து வழிபடும் அடியவர்களின் தீவினை
அழிந்துவிடும்.
கு-ரை:
போர் அணாவு - போரை மேற்கொண்ட.
8.
பொ-ரை: இரக்கம் அற்ற தொழில்புரியும் அரக்கனான
இராவணனின் உடல் நெரியும்படி கயிலைமலையின் கீழ் அடர்த்த
சிவபெருமான் திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமானின் திருவடிக் கமலங்களை சிரசின்
மேல் வைத்த மலர்போலக் கொண்டு, சிந்தையை ஒருமுகப்படுத்தி
வழிபடுபவர்கள், உலகில் புகழுடன் விளங்குவர்.
கு-ரை:
இரக்கமிஃறொழில் (இரக்கம் இல் தொழில்) - குறில் வழி
லளத்தவ் அணையின் ஆய்தம் ஆகவும் பெறூஉம் அல்வழியானே
(நன்னூல். 228) என்பது விதி. சிரக்கொள் பூவென (சிரம்கொள் பூவென) -
தலையில் அணியும் பூவைப்போல. எதுகை நோக்கி சிரக்கொள் என
வலித்தது. ஒருக்கினார் - சிந்தையை ஒருமைப் படுத்தினவர்.
9.
பொ-ரை: இதழ் நெருங்கிய தாமரைப் பூவில் வீற்றிருக்கும்
பிரமனும், பன்றி உருவெடுத்த திருமாலும் உணர்தற்கரியவனான சிவ
பெருமான், திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான்.
அப்பெருமானின் திருவடிகளை, பூவும், நீரும் கொண்டு பூசிப்பவர்கள், முத்தி
பெறுவர்.
கு-ரை:
துன்று பூமகன் - (பூ துன்று மகன்) பூவில் வாழும் பிரமன்.
சென்று - திருவீழிமிழலைக்குச் சென்று. மிழலையானடி - அக்
|