பக்கம் எண் :

1318திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

4071. மண்ணினா ரேத்த வானுளார் பரச
       வந்தரத் தமரர்கள் போற்றப்
பண்ணினா ரெல்லாம் பலபல வேட
     முடையவர் பயில்விட மெங்கும்
எண்ணினான் மிக்கா ரியல்பினா னிறைந்தா
     ரேந்திழை யவரொடு மைந்தர்
கண்ணினா லின்பங் கண்டொளி பரக்குங்
     கழுமல நகரென லாமே.                4

4072. சுருதியான் றலையும் நாமகண் மூக்குஞ்
       சுடரவன் கரமுமுன் னியங்கு
பரிதியான் பல்லு மிறுத்தவர்க் கருளும்
     பரமனார் பயின்றினி திருக்கை


திருவருளால் தோணிபோல் மிதந்து மழையினாற் பெறும் நன்மைகள்
குறைவறச் சிறந்துள்ள திருக்கழுமலநகர் எனலாம்.

     கு-ரை: சைவனார் - சிவனுக்கு ஒரு பெயர். ஊர் உறுபதிகள் - பல
ஊர்களுக்குத் தலைமையாய் உற்ற நகரங்கள். கார் உறு செம்மை - பருவ
காலத்தில் பெய்யாதொழிதலும் மிகுமழைபும் குறைமழையும் இல்லாமையுமாம்.

     4. பொ-ரை: மண்ணுலக மெய்யன்பர்கள் போற்றி வணங்கவும்,
வானத்திலுள்ள தேவர்கள் துதிக்கவும், பிரமன், திருமால் முதலியோர்கள்
போற்றவும் விளங்கி, எல்லாவற்றையும் ஆக்கியருளியவரும், பலபல
சிவமூர்த்தங்களாக விளங்குபவருமான சிவபெருமான் வீற்றிருந்தருளும்
இடமாவது, இறைவனின் திருவடி மறவா நினைவால் சிறந்த உள்ளம்
உடையவர்களும், செவ்விய அணிகலன்கள் அணிந்துள்ள மகளிரும்
அவரொடு நீங்காது ஒன்றித்து வாழும் ஆண்மை மிக்க ஆடவர்களும்,
காணுந்தோறும் இன்பம் நுகரத் திருவருள் ஒளியைப் பரப்புகின்ற
திருக்கழுமலநகர் எனக் கூறலாம்.

     கு-ரை: பரச - துதிக்க. அமரர் - தேவர். வானுளோர் அவர் ஒழிந்த
பிரம விட்டுணுக்கள் முதலியோர்.

     5. பொ-ரை: பிரமனது தலையையும், சரஸ்வதியின் மூக்கையும்,
தீக்கடவுளின் கையையும், காலம் காட்டி முன் செல்லும் சூரியனின்
பல்லையும் இறுத்து, பின் உமாதேவி வேண்ட அவர்கட்கு அருளும்