|
நட்டக்கொட்
டாட்டறா நல்லூர்ப் பெருமணத்
திட்டப்பட் டாலொத்தி ராலெம் பிரானிரே. 6 |
4143. |
மேகத்த
கண்டன்எண் தோளன்வெண் ணீற்றுமை |
|
பாகத்தன்
பாய்புலித் தோலொடு பந்தித்த
நாகத்தன் நல்லூர்ப் பெருமணத் தான்நல்ல
போகத்தன் யோகத்தை யேபுரிந் தானே. 7 |
எளியர். வேடுவக்
கோலத்தில் நெற்றிப்பட்டம் கட்டிய தலையினை
உடையவர். அவர் விரும்பி வீற்றிருந்தருளும் இடமாவது நாட்டியங்களின்
கொட்டு வாத்திய ஓசையும், திருவிழா முதலிய கொண்டாட்டங்களின்
ஓசையும் ஒழியாத, திருநல்லூர் என்னும் திருத்தலத்தில் பெருமணம் என்னும்
கோயிலாகும். எம் தலைவராகிய நீர் ஏனைய தலங்களிலும் விரும்பி
வீற்றிருக்கின்றீர்.
கு-ரை:
தலச்சிறப்பு: சிட்டப்பட்டார்க் கெளியன் - நியமம் தவறாது
வழிபடுவர்களுக்கு எளியவன். வேட்டுவப் பட்டம் கட்டும் சென்னியான் -
வேடுவக் கோலத்தில் நெற்றிப் பட்டம் கட்டிய தலையினை உடையவன்.
நட்டம் - நாட்டியங்களின். ஆட்டு - திரு விழா முதலான
கொண்டாட்டங்களின் ஓசையும், கொட்டு வாத்திய ஓசையும். அறா -
ஒழியாத. இட்டப்பட்டால் ஒத்திரால் ஏனைத் தலங்களிலும் மிகவிருப்பம்
உடையவர் போல் காணப்படுகின்றீர். எம் பிரான் நீர் - எமது தலைவராகிய
நீர். ஆல் - அசை
7.
பொ-ரை: இறைவன் மழைமேகம் போன்ற இருண்ட திருநீல
கண்டத்தன். எட்டுத் திருத்தோள்களை உடையவன். வெண்ணீற்று உமையாள்
என்னும் திருநாமம் தாங்கிய அம்பிகையை ஒரு பாகமாகக் கொண்டவன்.
பதுங்கியிருந்து பாயும் தன்மையுடைய புலியினை உரித்து அதன் தோலினை
ஆடையாக உடுத்தவன். அதன்மேல் பாம்பைக் கச்சாக இறுகக் கட்டியவன்.
அப்பெருமான் திருநல்லூர் என்னும் திருத் தலத்தில் பெருமணம் என்னும்
திருக்கோயிலில், உயிர்கள் போகம் துய்க்கும் பொருட்டுப் போகவடிவில்
விளங்குகின்றான். மேலும் மன்னுயிர்கள் நற்றவம் புரிந்து திருவடிப்
பேறெய்தும் பொருட்டு யோகத்தையே புரிந்தருள்வன்.
கு-ரை:
அம்பிகையின் சிறப்பு: மேகத்தகண்டன் - காளமேகம்
போலும் கரிய கண்டத்தை உடையவன். எண்தோளன் - எட்டுத் தோள்
|