பக்கம் எண் :

482திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

2919. போதியெ னப்பெய ராயினா ரும்பொறி
       யில்சமண்
சாதியு ரைப்பன கொண்டயர்ந் துதளர்
     வெய்தன்மின்
போதவிழ் தண்பொழில் மல்குமந் தண்புன
     வாயிலில்
வேதனை நாடொறு மேத்துவார் மேல்வினை
     வீடுமே.                           10


காண்பதற்கரியவன் சிவபெருமான். அவன் விரும்பி எழுந்தருளியுள்ள இடம்
கடலின் வெண்ணிற அலைகள் கரையை மோதும்போது தள்ளப்பட்ட
ஒலிக்கின்ற சுரிசங்குகளும், சிப்பிகளும் நிறைந்து செல்வம் கொழிக்கும்
திருப்புனவாயில் ஆகும்.

     கு-ரை: திருவளர்தாமரை - திணைமயக்கம். “உரிப்பொருளல்லன
மயங்கவும் பெறுமே” யென்பது சூத்திரம். நரல் - ஒலிக்கின்ற. சுரிசங்கு -
சுரிந்த முகத்தையுடைய சங்கு.

     பொருகடல் - கரையை மோதும் கடல். காண்பரியான் - காண்டல்
அரியவன். காண்பு - தொழிற்பெயர். கடவுளிடம் புனவாயில் ‘கடவுள்ளிடம்’,
‘உந்திந் நலம்’ என்பனவும், மேலைப்பாடலில் ஆடல் லெழில் என்பதும்
இசைநோக்கி விரித்தல் விகாரப்பட்டன.

     10. பொ-ரை: புத்தர்களும், சமணர்களும் சாதித்துக் கூறுகின்ற
சொற்களைக் கேட்டு உணர்வழிந்து தளர்ச்சி அடைய வேண்டா. பூக்கள்
மலர்ந்துள்ள குளிர்ச்சி பொருந்திய சோலைகள் நிறைந்த அழகிய குளிர்ந்த
திருப்புனவாயிலி்ல் வீற்றிருந்தருளும் வேதத்தின் பொருளாயுள்ள
சிவபெருமானை நாள்தோறும் போற்றி வழிபடுபவர்களின் வினையாவும்
நீங்கும்.

     கு-ரை: போதி - அரசமரம். போதி எனப் பெயராயினாரும் என்பது
புத்தரைக் குறித்தது. சமண் - சமணர்.

     எய்தன்மின் - எய்தா(அடையா) தீர்கள். வேதன் - வேதத்தின்
பொருளாயுள்ளவன்.