2919. |
போதியெ
னப்பெய ராயினா ரும்பொறி |
|
யில்சமண்
சாதியு ரைப்பன கொண்டயர்ந் துதளர்
வெய்தன்மின்
போதவிழ் தண்பொழில் மல்குமந் தண்புன
வாயிலில்
வேதனை நாடொறு மேத்துவார் மேல்வினை
வீடுமே. 10
|
காண்பதற்கரியவன்
சிவபெருமான். அவன் விரும்பி எழுந்தருளியுள்ள இடம்
கடலின் வெண்ணிற அலைகள் கரையை மோதும்போது தள்ளப்பட்ட
ஒலிக்கின்ற சுரிசங்குகளும், சிப்பிகளும் நிறைந்து செல்வம் கொழிக்கும்
திருப்புனவாயில் ஆகும்.
கு-ரை:
திருவளர்தாமரை - திணைமயக்கம். உரிப்பொருளல்லன
மயங்கவும் பெறுமே யென்பது சூத்திரம். நரல் - ஒலிக்கின்ற. சுரிசங்கு -
சுரிந்த முகத்தையுடைய சங்கு.
பொருகடல்
- கரையை மோதும் கடல். காண்பரியான் - காண்டல்
அரியவன். காண்பு - தொழிற்பெயர். கடவுளிடம் புனவாயில் கடவுள்ளிடம்,
உந்திந் நலம் என்பனவும், மேலைப்பாடலில் ஆடல் லெழில் என்பதும்
இசைநோக்கி விரித்தல் விகாரப்பட்டன.
10.
பொ-ரை: புத்தர்களும், சமணர்களும் சாதித்துக் கூறுகின்ற
சொற்களைக் கேட்டு உணர்வழிந்து தளர்ச்சி அடைய வேண்டா. பூக்கள்
மலர்ந்துள்ள குளிர்ச்சி பொருந்திய சோலைகள் நிறைந்த அழகிய குளிர்ந்த
திருப்புனவாயிலி்ல் வீற்றிருந்தருளும் வேதத்தின் பொருளாயுள்ள
சிவபெருமானை நாள்தோறும் போற்றி வழிபடுபவர்களின் வினையாவும்
நீங்கும்.
கு-ரை:
போதி - அரசமரம். போதி எனப் பெயராயினாரும் என்பது
புத்தரைக் குறித்தது. சமண் - சமணர்.
எய்தன்மின்
- எய்தா(அடையா) தீர்கள். வேதன் - வேதத்தின்
பொருளாயுள்ளவன்.
|