பக்கம் எண் :

50மூன்றாம் திருமுறையின்உரைத்திறம் 

     பாடல் பயிலும் பரமர் பழமை எனலாம் - 70-5

     பழமை-பழமையாகிய பதி-பண்பாகுபெயர்

     சீதம் அது அணிதரு முகிழ் இள வனமுலை - 87-2

     சீதம்-சந்தனக்குழம்பு-பண்பாகுபெயர்

     காமனைக் கவின் அழித்த -90-4

     உடம்பைக்கவின் என்றது தானியாகுபெயர்

     கம்பின் ஆர் நெடுமதில் காழி -93-11

     கம்பு-சங்கு-சுட்ட சுண்ணாம்பிற்கானது கருவியாகுபெயர்

     ஏடு அமர் பொழில் அணி இன்னம்பர் -95-11

     ஏடு-இதழ். மலருக்கு ஆனமை சினையாகுபெயர்

     உமை அறிபவர் நசை அறி நாவினர் தாமே -98-7

     நாவினர்-பேச்சை உடையவர். நா-கருவியாகுபெயர்

     சோலைகள் சூழ்ந்த செம்மைத் தோணிபுரம் தானே - 100-1

     செம்மை-செம்பொருள்-ஆகுபெயர். இப்பொருள் தருதலைச்
‘செம்பொருள் கண்டார்’ என்ற திருக்குறளுக்குப் பரிமேலழகர் உரைத்த
உரையான் அறிக.

     துறைகெழு கேதகை மீது வாசம் சூழ்வான் மலிதென்றல் - 105-6

     வாசம்-மகரந்தம்-காரியஆகுபெயர்.

     உன்னிய சிந்தையின் நீங்க கில்லார்க்கு உயர்வாம்;
பிணிபோமே - 106-3

     உயர்வுஆம்-முத்தி எய்தும். உயர்வு-ஆகுபெயர்

     ஆலை ஆருர் ஆதி ஆனைக்காவே - 109-3