ஆலை
ஆரூர்-கருப்பங்கழிகளை உடைய திருவாரூர்.
ஆலை-தானியாகுபெயர்.
படையில்
அம் கையில் நல் அம் என்பதே -114-2
அம்-அழகு.
அஃது அணிகலனுக்கு ஆகியது காரிய ஆகுபெயர்.
அம்கை
விரலைக் குறித்தது முதலாகுபெயர்
யாமா
மா -117-3
மா-பெருமை
வாய்ந்தவனே-பண்பு ஆகுபெயர்.
பரிமேலழகருடைய
உரையில் தோய்ந்த புலமையால், தாம்
ஆகுபெயர்ப்பொருள் குறிப்பிடும் இடங்களிலெல்லாம் ஆகுபெயர்களின்
பலவகைகளையும் சுட்டிச் சொல்லுதல் இவருக்கு வழக்கம் என்பதனைக்
காண்கிறோம்.
ஆ.
விகுதியைக் குறிப்பிட்டு விளக்கம் தருதல்
வேயின்
ஆர் பணைத்தோளி -1-8
தோள்+இ.
இகரம் பெண்பால்விகுதி
பாம்பினோடு
மதிசூடினானும் பசு ஏறியும் -7-2
ஏறி-ஏறினவன்.
ஏறு+இ,இகரம் ஆண்பால்விகுதி
வரைபொருதோள்
இறச் செற்ற வில்லி -10-4
வில்லி-இராமன்.
இகரம் ஆண்பாலில் வந்தது.
வாழியாகக்
கற்பவர் வல்வினைகள் மாயுமே -53-11
வாழி-வாழ்வு
தருவது. இகரம் கருவிப்பொருளில் வந்தது.
பலவும்
சேர் கனி உந்தி -64-11
உந்தி-காவிரி.
உந்து+இ. இகரம் லினைமுதற்பொருளில்
|