பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)14. திருப்பைஞ்ஞீலி503

2950. தொத்தின தோள்முடி யுடைய வன்றலை
  பத்தினை நெரித்தபைஞ் ஞீலி மேவலான்
முத்தினை முறுவல்செய் தாளொர் பாகமாப்
பொத்தினன் திருந்தடி பொருந்தி வாழ்மினே.    8

2951. நீருடைப் போதுறை வானு மாலுமாய்ச்
  சீருடைக் கழலடி சென்னி காண்கிலர்
பாருடைக் கடவுள்பைஞ் ஞீலி மேவிய
தாருடைக் கொன்றையந் தலைவர் தன்மையே.    9


சிவனாகிய என்னைச் சீவனாகச் செய்யும் பண்பு என்னே? எனக்
கடைசியடிக்குப் பொருள் கொள்க. கொல்-அசைநிலை.

     8. பொ-ரை: கொத்தாகவுள்ள இருபது தோள்களைக் கொண்ட
இராவணனின் முடியுடைய தலைகள் பத்தையும் இறைவன் நெரித்தான்.
அப்பெருமான் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் விரும்பி
வீற்றிருந்தருளுகின்றான். முத்துப் போன்ற பற்களை உடைய உமாதேவியை
ஒருபாகமாக அணைத்துக் கொண்டவன். அப் பெருமானின் திருவடிகளைப்
பொருந்தி வாழ்வீர்களாக.

     கு-ரை: தொத்தின-கொத்தாகிய. தோள்-தோள் இருபதையும்.
முடியுடையவன் தலை, பத்தினை-பத்தையும். முத்தினை முறுவல்
செய்தாள்-முத்தைப் பல்லாகச் செய்து கொண்ட உமா தேவியார் என்றது,
முத்துப் போன்ற பல்லையுடையவள் என்றபடி, பொத்தினன்-அணைத்துக்
கொண்டவன். முத்தை இகழ்ந்தவள் என்றும் ஆம்.

     9. பொ-ரை: நீர்நிலைகளில் விளங்குகின்ற தாமரை மலரில்
வீற்றிருக்கின்ற பிரமனும், திருமாலும் திருமுடியையும், சிறப்புடைய கழலணிந்த
திருவடிகளையும் தேடியும் காணாது நிற்க, இவ்வுலகை உடைமைப்
பொருளாகக் கொண்ட இறைவன் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில்
கொன்றைமாலை அணிந்த தலைவனாய் வீற்றிருந்தருளுகின்றான்.

     கு-ரை: நீருடைப்போது-தண்ணீரைப் பிறப்பிடமாகவுடைய தாமரைப்பூ.
பிரமனும் மாலுமாய் இருவரும் கூடித்தேடியும் அடி சென்னி காண்கிலார்
என்பது எதிர்நிரல் நிறையாகலின், முறையே சென்னி, அடிகாண்கிலார்
எனக்கூட்டுக. பார் உடைக் கடவுள்-உலகம்