பக்கம் எண் :

516திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

  படுத்தன ரென்றவன் பாடல் பாடலும்
கொடுத்தனர் கொற்றவாள் கொள்ளிக் காடரே.     8

2973. தேடினா ரயன்முடி மாலுஞ் சேவடி
  நாடினா ரவரென்று நணுக கிற்றிலர்
பாடினார் பரிவொடு பத்தர் சித்தமும்
கூடினார்க் கருள் செய்வர் கொள்ளிக் காடரே.     9

2974. நாடிநின் றறிவில்நா ணிலிகள் சாக்கியர்
  ஓடிமுன் னோதிய வுரைகள் மெய்யல
பாடுவர் நான்மறை பயின்ற மாதொடும்
கூடுவர் திருவுருக் கொள்ளிக் காடரே.           10


ணர்ந்து, தன்னை வருத்திய சிவனைப் போற்றிச் சாமகானம் பாட, இறைவர்
இரங்கி வீரவாளை அருளினார். அப்பெருமானார் திருக்கொள்ளிக்காடு
என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.

     கு-ரை: இயல் - தனக்கு உள்ள. வலியினால் - வலிமையினால்.
அலறிடத் திருவிரலால் அடர்த்தனர் என்க. ‘நம்மைச் சிவன் வருத்தினன்’
என்று தன்னுள் நினைத்து. அவன் - அவ்விராவணன்.

     9. பொ-ரை: பிரமன் திருமுடியினையும், திருமால் திருவடியையும்
தேட, அவர்களால் எப்பொழுதும் அணுகமுடியாதவராய் விளங்கும்
சிவபெருமான், பக்தர்கள் மனம் ஒன்றி அன்பால் அகம் குழைந்து பாட
அருள்செய்வார். அப்பெருமானார் திருக்கொள்ளிக்காடு என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.

     கு-ரை: அயன்முடி, மால் சேவடி, தேடினார் என்க. தேடினவர்களாகிய
அவர்களால் எப்பொழுதும் அணுக முடியாதவராயிருப்பர். அன்போடு
பாடியவர்களாய் மனமும் ஒருமைப்பட்ட பத்தர்கட்கு நணுகுபவராய்
இருப்பதன்றி அருளும் செய்வர் திருக்கொள்ளிக்காடர்.

     10. பொ-ரை: இறையுண்மையை உணரும் அறிவில்லாத நாணமற்ற
சமணரும், புத்தர்களும் முனைந்து சொல்லும் உரைகள் மெய்யானவை அல்ல.
அவர்களைச் சாராதுவிட்டு, நான்கு வேதங்களை அருளிய சிவபெருமான்,
நன்கு பழகிய உமாதேவியோடு திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளும் திருக்கோலத்தைக் கண்டு தரிசித்து உய்தி அடையுங்கள்.