பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)19. திருஅம்பர்ப் பெருந்திருக்கோயில்533

3003. கழல்வளர் காலினர் சுடர்கை மல்கவோர்
  சுழல்வளர் குளிர்புனல் சூடி யாடுவர்
அழல்வளர் மறையவர் அம்பர்ப் பைம்பொழில்
நிழல்வளர் நெடுநகர் இடம தென்பரே.         6

3004. இகலுறு சுடரெரி யிலங்க வீசியே
  பகலிடம் பலிகொளப் பாடி யாடுவர்
அகலிட மலிபுகழ் அம்பர் வம்பவிழ்
புகலிட நெடுநகர் புகுவர் போலுமே.           7

3005. எரியன மணிமுடி யிலங்கைக் கோன்தன
  கரியன தடக்கைகள் அடர்த்த காலினர்


     6. பொ-ரை: இறைவர் வீரக்கழல்கள் அணிந்த திருவடிகள் உடையவர்.
சுடர்விட்டு எரியும் நெருப்பைக் கையில் ஏந்தியுள்ளவர். நீர்ச்சுழிகளையுடைய
குளிர்ந்த கங்கையைச் சடையில் சூடி ஆடுவர். அப்பெருமானார், வேள்வித்தீ
வளர்க்கும் அந்தணர்கள் வாழ்கின்ற அம்பர் மாநகரில் அழகிய
சோலைகளையுடைய நிழல்தரும் பெருந் திருக்கோயிலில்
வீற்றிருந்தருளுகின்றார்.

     கு-ரை: கழல்வளர் - கழலோசை மிகும், காலையுடையவர். சுடர் -
நெருப்பு. சுழல்...புனல் - நீர்ச்சுழிகளையுடைய கங்கை நீரைச், சூடி ஆடுவர்.
அழல் - நித்திய அக்கினி. நெடுநகர் - பெருந்திருக்கோயில். நகர் -
கோயில். “நடுவூர் நகர்செய்து அடுபவம் துடைக்கும்” என்னும் கல்லாடத்தால்
அறிக.

     7. பொ-ரை: இறைவர், வலிமைமிக்க சுடர்விட்டு எரியும் நெருப்பை
ஏந்தித் தோள்களை வீசிப் பலி ஏற்கும் பொருட்டுப் பாடி ஆடுவர்.
அப்பெருமானார் அகன்ற இப்பூவுலகெங்கும் பரவிய மிகு புகழையுடைய
அம்பர் மாநகரில், தெய்விக மணம் கமழும் திருக்கோயிலைத் தமது
இருப்பிடமாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்றார்.

     கு-ரை: இகல்உறு - வலிமை மிக்க. அகல் இடம் மலிபுகழ் அம்பர் -
இந்த உலகமெங்கும் மிகப் பரவிய புகழையுடைய அம்பர். போலும் -
உரையசை.

     8. பொ-ரை: சிவபெருமான், நெருப்புப் போன்று ஒளிவீசும்
இரத்தினங்கள் பதிக்கப்பட்ட கிரீடம் அணிந்த இலங்கை மன்னனான