|
அரியவர்
வளநகர் அம்பர் இன்பொடு
புரியவர் பிரிவிலாப் பூதஞ் சூழவே. 8
|
3006. |
வெறிகிளர்
மலர்மிசை யவனும் வெந்தொழிற் |
|
பொறிகிள
ரவணைப் புல்கு செல்வனும்
அறிகில அரியவர் அம்பர்ச் செம்பியர்
செறிகழ லிறைசெய்த கோயில் சேர்வரே. 9 |
இராவணனின் கரிய,
பருத்த கைகளை அடர்த்த திருவடிகளை யுடையவர்.
அருந்தவத்தோர் வாழ்கின்ற வளம் பொருந்திய அம்பர் மாநகரில், தம்மைப்
பிரிவில்லாத பூதகணங்கள் புடைசூழ இனிதே வீற்றிருந்தருளுகின்றார்.
கு-ரை:
எரி அ(ன்)னமணி - நெருப்புப் போன்ற ஒளியுடைய
இரத்தினம். கரியன - கருநிறத்தையுடையன ஆகிய. தடக்கைகள் - பருத்த
கைகள். கரியன - வினைப் பெயர். அரியவர் வளநகர்...சூழவே -
அருந்தவத்தோர் வாழ்கின்ற வளநகராகிய திருவம்பர்ப் பெருங்கோயிலுக்குத்
தம்மைப் பிரிதலில்லாத பூதகணம் சூழ, மகிழ்வோடு போதலையுடையவர்.
புரிதல் - செய்தல் என்னும் பொதுவினை - போதல் என்னும் சிறப்புவினைப்
பொருளைத்தந்தது. புரீ இயவர் என்பதன் மருஉ புரியவர் எனக்கொண்டு
விரும்புதலையுடையவர் எனினும் ஆம். இனி, அரியவர்...நகர் - என்பதற்கு
யாராலுங் காண்டற்கு அரியராய் இருப்பவர். அவர் வளநகர் அம்பர் ஆகும்
எனலும் ஆகும்.
9.
பொ-ரை: நறுமணம் கமழும் தாமரை மலர்மேல் வீற்றிருக்கும்
பிரமனும், கொல்லும் தன்மையுடைய பாம்பைப் படுக்கையாகக் கொண்டுள்ள
செல்வனாகிய திருமாலும், அறிதற்கு அரியரான இறைவர் திரு அம்பர்
மாநகரில் கோச்செங்கட்சோழ மன்னன் கட்டிய திருக்கோயிலில் தம்
கழலணிந்த திருவடி பொருந்த வீற்றிருந்தருளுகின்றார்.
கு-ரை:
வெறி - வாசனை. வெந்தொழில் ... அரவு - கொடிய கொலைத்
தொழிலையுடையதாகிய அரவு. படப்புள்ளிகளையுடையதாகிய அரவு. புல்கு -
பொருந்திய. அடிதேடி அறியாதவனைச் செல்வன் என்றது குறிப்பு மொழி.
அறனன்று மாதவனென்ப துலகு எந்தை தாள்காணான் நாணுக் கொள
என்ற குமரகுருபரர் வாக்கு இங்கு நினைவிற்கு வருகின்றது. செறிகழல் -
அணிந்த கழல், செம்பியர் இறை - சோழ அரசர்.
|