பக்கம் எண் :

538திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3012. வாசநன் மலர்மலி மார்பில் வெண்பொடிப்
  பூசனைப் பொழில்திகழ் பூவ ணத்துறை
ஈசனை மலர்புனைந் தேத்து வார்வினை
நாசனை யடிதொழ நன்மை யாகுமே.           4

3013. குருந்தொடு மாதவி கோங்கு மல்லிகை
  பொருந்திய பொழிற்றிருப் பூவ ணத்துறை
அருந்திறல் அவுணர்தம் அரண மூன்றெய்த
பெருந்தகை அடிதொழப் பீடை யில்லையே.     5


கொள்க. பிரயோக விவேகமுடையார் கருத்துக் கொள்ளற்க. “மாலைக்
காலத்தில் உதிக்கும் வெண் பிறையோடு கங்கையைச் சூடிய நந்தி” என்பது
மூன்றாம் அடியின் பொருள். நந்தி சிவனுக்கொரு பெயர். “நந்தி நாமம்
நமச்சிவாயவே” என்பது இத்திருமுறை. ஆறு - கங்கை. பொதுப் பெயர்
சிறப்புப் பெயராயிற்று.

     4. பொ-ரை: நறுமணம் கமழும் மலர்மாலைகளை அணிந்துள்ள
மார்பில், திருவெண்ணீற்றினைப் பூசி, சோலைகளையுடைய திருப்பூவணம்
என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான், மலர்புனைந்து
ஏத்தும் அன்பர்களின் வினையைப் போக்குவான். அப்பெருமானின்
திருவடிகளைத் தொழ எல்லா நன்மைகளும் உண்டாகும்.

     கு-ரை: வெண்பொடி பூசனை - வெள்ளியநீறு பூசிய வனை; ஈசனை.
வினை - பாவம். பாவநாசனை அடிதொழ நன்றி யாகும். பாவநாசன்,
சிவனுக்கொரு பெயர். “மன்ன... பாவநாச நின்சீர்கள் பரவவே” என்பது
திருவாசகம். பூசன் - இரண்டுறுப்பால் முடிந்த குறிப்பு வினைமுற்று.

     5. பொ-ரை: குருந்து, மாதவி, கோங்கு, மல்லிகை மலர்ந்துள்ள
சோலைகளையுடைய திருப்பூவணம் என்னும் திருத் தலத்தில்
வீற்றிருந்தருளுகின்ற அரு வலிமையுடைய அசுரர்களின் மூன்று
கோட்டைகளையும் அம்பு எய்து அழித்த பெருந் தகையான சிவபெருமானின்
திருவடிகளைத் தொழ, துன்பம் யாவும் நீங்கும்.

     கு-ரை: அரும்திறல் - (வெலற்கு) அரிய வலிமை. பெருந்தகை -
சிவனுக்கு ஒரு பெயர்; “பெண்ணினல்லாளொடும் பெருந்தகை இருந்ததே”
என்பது இத்திருமுறை. பீடை - தோடம், காரணப்பெயர்;